பா.ஜ.க மாநில பொதுக் குழு உறுப்பினர் புகழேந்தி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை

 நாகப்பட்டிணத்தில் பாரதிய ஜனதா மாநில பொதுக் குழு உறுப்பினர் புகழேந்தி (53), இன்று காலை மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் , இந்த தமிழகம் எங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புகழேந்தி அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் கடற் கரைக்கு வாக்கிங்சென்றார். பிறகு வீடு திரும்பி கொண்டிருந்தார். நாகை எல்ஐசி. அருகே வந்த போது ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் 4 பேர் கொண்ட கும்பல் புகழேந்தியை வழிமறித்து சரமாரியாக அரி வாளால் வெட்டியது. இதில் ரத்தவெள்ளத்தில் புகழேந்தி அதே இடத்திலேயே பரிதாபமா க இறந்தார். பிறகு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும்_போலீஸ் சூப்பிரண்டு ராமர் சம்பவ இடத்துக்கு வந்தார் விசாரணை மேற்கொண்டார் . போலீஸ் மோப்பநாய் வரவழைக்கபட்டது. அது கொலை நடந்த இடத்திலிருந்து 1 கிமீ தூரம் உள்ள அக்கரைகுளம் வரை சென்றது.

காவல்துறையினர் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர் . கொலையாளிகளை உடனடியாக கைதுசெய்ய கோரி நாகை மாவட்ட பா.ஜ.க தலைவர் வரதராஜன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது. இதனால் நாகையில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது .

கொலை செய்யப்பட்ட புகழேந்திக்கு, மனைவியும், 1 மகள், 2 மகன்கள் உள்ளனர். இவர் மிகசிறந்த சுறுசுறுப்பான நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...