பகவத் கீதையில் ஒரு சந்தேஹம்

பகவத் கீதையில் ஒரு சந்தேஹம் அந்த மஹாவித்வான் உள்ளே நுழைகிறார். அவர் உடம்பில் அகலக் கரை வைத்த பட்டு வேஷ்டியும், உத்தரீயமும். கைகளில் பளபளக்கும் தங்கத் தோடாக்கள். மார்பில் ரத்தினப் பதக்கம் பொறித்த கனமான தங்கச் சங்கிலி. கூடவே தங்கப் பூண் பதித்த நீண்டதொரு ருத்ராக்ஷ மாலை. அவரைப் பார்த்தாலே மெத்தப் படித்து, மிகப்பல கௌரவங்கள்

பெற்ற ஒரு மஹா வித்வான் எனச் சொல்லாமலே புரிந்துவிடும். பெரியவாளுக்கு தண்டனிட்டு நமஸ்காரங்களைச் செலுத்தியபின், சற்று மெதுவாகக் கிட்டே வந்து, வலது கையால் வாய் புதைத்து……]

"பெரியவாகிட்ட ஒரு விஞ்ஞாபனம். எனக்கு பகவத் கீதையில் ஒரு சந்தேஹம்" எனக் கூறி அமர்கிறார்.

பெரியவா உடனே அங்கே கூடியிருந்தவர்களைப் பார்த்து: "எல்லாரும் முதல்ல இந்த வித்வானுக்கு மூணு ப்ரதக்ஷிணம் பண்ணுங்கோ!" என ஆக்ஞை பிறப்பிக்கிறார்.

மடத்துச் சிப்பந்திகளுக்கும், மற்றவர்களுக்கும் ஒரே அதிர்ச்சி! வித்வானுக்கும் தான்!

"எதுக்கு இதெல்லாம், பெரிவா?" எனப் பதைபதைக்கிறார்.

"பகவத் கீதையின் ஒவ்வொரு வார்த்தையைப் படிச்சதுமே, அதுல எனக்கு ஆயிரம் சந்தேஹங்கள் தோணறது. உங்களுக்கோ ஒரே ஒரு சந்தேஹந்தான்! என்ன ஒரு வித்வத்! என்ன ஒரு அறிவு! அதனாலத்தான் இவாளையெல்லாம் உங்களைப் ப்ரதக்ஷிணம் பண்ணச் சொன்னேன்."

நடமாடும் தெய்வம் அமைதியாகப் புன்னகைத்தபடி பதிலிறுக்கிறது!

அவ்வளவுதான்! அந்த மஹா வித்வானின் கர்வம், ஆணவம் அனைத்தும் நொறுங்கிப் பொடிப்படி ஆகிறது. அவரால தனது குனிந்த தலையை நிமிர்த்தக்கூட முடியவில்லை.

"ம்ம்ம்.. என்ன சந்தேஹம்? சொல்லுங்கோ" தெய்வம் மேலும் அன்புடன் கேட்கிறது.

இவரும் தயங்கித் தயங்கிப் பணிவுடன் தனது சந்தேஹத்தைக் கேட்க, "அது"வும் பொறுமையாக அவருக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறது!

"தன்யனானேன்!" புளகாங்கிதத்துடன், கர்வமெல்லாம் மறைந்து அந்த மஹா வித்வான் தெய்வத்திற்கு சாஸ்திரங்களில் சொல்லியபடி அஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்துவிட்டு எழுந்திருக்கிறார்.

அவருக்குத் தக்க மரியாதைகளையும், கௌரவத்தையும் அளித்து, தெய்வம் அருள் பாலிக்கிறது.

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!

நன்றி : Dr . சங்கர் குமார் வட கரோலினா USA

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...