ஆந்திர மாநில முதல்வர் கிரண் குமார் ரெட்டிக்கும் அம்மாநில மத்திய மற்றும் கேபினட் அமைச்சர்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பு சுத்தமாக இல்லை என பா.ஜ.க தேசிய செயலாளர் கே.லட்சுமணன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது – கிரண் குமார் ரெட்டிக்கும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்களுக்குமிடையே ஒருங்கிணைப்பே இல்லை. ஆளும் காங்கிரஸ்கட்சிக்குள் கோஷ்டி பூசல்தான் நிலவுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கிரண்குமாரும் அவரது அமைச்சரவை சகாக்களும் ஒருவருக் கொருவர் ஒத்துழைப்பு தருவதில்லை .
ஐதராபாத் மெட்ரோரயில் திட்டத்தின் 2வது கட்ட துவக்கவிழா நடந்த போது மத்திய விஞ்ஞான, தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜெய்பால்ரெட்டி அதில் கலந்து கொள்ளவில்லை. இதுஒன்றே இவர்களுக்கிடையே இருக்கும் வேற்றுமைக்கு சாட்சி. இத்தனைக்கும் ஜெய்பால் ரெட்டி ஐதராபாத்தில் தான் இருந்திருக்கிறார். ஆனால் அவர் விழாவுக்கு வரவில்லை. அதுமட்டுமல்ல. கிரண்குமார்ரெட்டி தலைமையில் மாநில_அமைச்சரவை கூட்டம் 4 மாதங்களுக்குபிறகு சமீபத்தில் நடைபெற்றது. இதிலும் பல் வேறு காரணங்களை காட்டி 7 மந்திரிகள் கலந்து கொள்ளவில்லை. இப்படித் தான் நடக்கிறது கிரண் குமார் ரெட்டியின் ஆட்சி. இவ்வாறு கிரண் குமார் ஆட்சியின் அவலங்களை புட்டுப் புட்டு வைத்தார் லட்சுமணன்.
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.