வங்கத்தில் ஜனித்த சுதேசி இயக்கம் 3

  வங்கத்தில் ஜனித்த சுதேசி இயக்கம்  3 "காலியோ" ,"லாவோ" என்ற பெயருடைய இரண்டு கப்பல்கள் வாங்குவதில் வெற்றிபெற்ற வ.உ.சிதம்பரம்பிள்ளையை தேசியப் பத்திரிகைகள் வானளாவி புகழ்ந்து தள்ளின, என்று எனது முந்தைய பதிவுகளில் பார்த்தோம், இனி அது எவ்வாறு என்று பார்ப்போம்.

பாரதியாரின் "இந்தியா" பத்திரிக்கையிலே வந்தேமாதரம் எனும் மந்திர சொல் பொறித்தக்கொடியுடன் கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்தினை அணுகுவது போலவும், ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கூடி "வீரச்சிதம்பரம் வாழ்க" எனக் கோஷித்துக் கப்பல்களை வரவேற்பது போலவும், கார்ட்டூன் வெளியிடப்பட்டது.

சுதேசிக்கப்பல்களை வரவேற்று பாரதியார் எழுதியது பின்வருமாறு,
"வெகுகாலம் புத்திரப்பேறின்றி அருந்தவம் செய்து வந்தப்பெண்ணொருத்தி இரண்டு புத்திரர்களைப் பெற்றால் அவள் எந்த அளவிற்கு ஆனந்தம் அடைவாளோ அந்த அளவிற்கு ஆனந்தத்தினை இன்று நம் பாரதத்தாய் அடைந்திருக்கிறாள்.

வ.உ.சிதம்பரம்பிள்ளையும், அவருடன் இருந்த மற்ற நண்பர்களும் தாம் பிறந்து வளர்ந்த பாரதத்தாய்நாட்டிற்கு செய்யவேண்டிய கடமைகளை செய்துவிட்டார்கள்."

பாரதி சுதேசிக்கப்பல்களை வரவேற்றாலும் அவற்றிற்கு தரப்பட்ட பெயர்கள் அவருக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை, இது பற்றி பாரதியே பேசுகிறார்.

"இந்தக்கப்பல்களுக்கு இப்போது கொடுக்கப்பட்ட பெயர்கள் எப்போதும் இருப்பனவா?இல்லை சுதேசி இயக்கத்திற்கு இணங்க வேறு பெயர்கள் மாற்றப்படுமா? நம் கொள்கைகளுக்கு இணங்க வேறு பெயர்கள் மாற்றப்படவேண்டும் என்றே எண்ணுகிறோம்." என்று கூறி சில சுதேசிப் பெயர்களையும் சிபாரிசு செய்தார்,
(ஆதாரம் இந்தியா, ஆனி 1907)

இந்த சூழலில்தான் இந்திய தேசியக் காங்கிரஸின் மாநாடு சூரத்தில் நடக்க இருந்தது, பாலகங்காதர திலகர் இந்த மாநாட்டிற்கு வ.உ.சிதம்பரம்பிள்ளை, பாரதியார், உள்ளிட்ட தமிழகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்,

தொடரும……….,

நன்றி ; ராம்குமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...