எலியாக பலியாகும் இந்தியர்கள்.

 எலியாக பலியாகும் இந்தியர்கள். ''பன்னாட்டு மருந்து நிறுவனங்கள், இந்திய மக்களை பரிசோதனைக்கூட எலிகளாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது. இது, நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும்''

-இப்படி எச்சரித்திருப்பது… தனியார் தொண்டு நிறுவனத்தினரோ… பொதுநல ஆர்வலர்களோ அல்ல… உச்ச நீதிமன்றம்!

பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள், இந்தியாவில் தாறுமாறாக பரிசோதித்துப் பார்க்கப்படுகின்றன என்கிற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாகவே இங்கே முன் வைக்கப்படுகின்றன. ஆனால், இங்கேயுள்ள அரசுகள் கண்டுகொள்வதே இல்லை!

இந்நிலையில், 'புதிதாக அறிமுகப்படுத்தப்படும் மருந்துகளை விற்பனைக்கு அனுப்பும் முன்பாக அவற்றைப் பரிசோதித்து அதன் விளைவுகள் குறித்து நிறுவனங்கள் ஆய்வு செய்ய வேண்டும். இதற்காக இந்தியர்களிடம் சட்டவிரோதமாக அம்மருந்துகள் பரிசோதித்துப் பார்க்கப்பட்டுள்ளன. மனநலம் பாதிக்கப்பட்ட 233 பேர், கைக்குழந்தை முதல் 15 வயதுக்கு உட்பட்ட 1,833 பேரிடம் இத்தகைய மருந்துகளைக் கொடுத்து பரிசோதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. 2008&ம் ஆண்டு 288 பேரும், 2009&ம் ஆண்டு 637 பேரும், 2010-ம் ஆண்டு 597 பேரும் இதனால் உயிரிழந்துள்ளனர்' என கடந்த ஓராண்டுக்கு முன், தொண்டு நிறுவனங்கள் மூலமாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதிகள் ஆர்.எம். லோதா, ஏ.ஆர். தவே ஆகியோரடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை மீண்டும் இந்த மனு விசாரணைக்கு வந்தபோதுதான் இப்படி, மத்திய அரசை எச்சரித்துள்ளனர் நீதிபதிகள்!

''பன்னாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்களின், பரிசோதிக்கப்படாத மருந்துகள், சட்ட விரோதமாக இந்திய மக்களிடம் கொடுத்து பரிசோதித்துப் பார்க்கப்படுகின்றன. இதனால் ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இது நாட்டில் பேரழிவை ஏற்படுத்துகிறது. இப்பிரச்னையைத் தடுக்க அரசு தவறி விட்டது. பரிசோதனைகளால் ஏற்படும் மரணங்கள் தடுக்கப்பட வேண்டும். சட்டவிரோத மருந்துப் பரிசோதனைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இவ்வகைப் பரிசோதனைகளால், இதுவரை உயிரிழப்பு ஏற்பட்டதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள். இறந்தவர்களின் உயிரைத் திரும்ப அளிக்க முடியாது. ஒரு விசாரணை அமைப்பையோ, குழுவையோ அமைப்பது மிகசுலபமானது. மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக குழுக்கள் அமைக்கப்படுகின்றன. முக்கியமான பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப, விசாரணைக்குழுவை அமைப்பது மிகச் சிறந்த வழியாகிவிட்டது. அரசு தன் பொறுப்பில் இருந்து விலகிச் செல்வதை, அது தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தின் மூலம் அறிய முடிகிறது'' என்றும் சாடியுள்ளனர் நீதிபதிகள்!

இப்படி பொதுநலன் சார்ந்த விஷயங்களில் பொதுநலவாதிகள், தொண்டு நிறுவனத்தினர் குரல்கொடுத்தால்… 'வெளிநாட்டு நிறுவனங்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு பிரச்னை செய்கிறார்கள்' என்று விஷயத்தையே குழி தோண்டி புதைத்துவிடுவதுதான் இங்கே வழக்கம்!
இப்போது, உச்ச நீதிமன்றமே கதறியிருக்கிறது… இந்த அரசியல்வியாதிகள் என்ன செய்யப் போகிறார்களோ?!

-ஜூனியர் கோவணாண்டி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...