ராஜ்நாத்சிங் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது கட்சிக்கு நன்மை

 பா. ஜனதா தலைவராக ராஜ்நாத்சிங் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு  குஜராத் மாநில முதல்வர்  நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். ராஜ்நாத்சிங் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது கட்சிக்கு நன்மைதரும் என மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

உபி., மாநில முன்னாள் முதல்வர் ராஜ்நாத்சிங் அகில இந்திய தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இதை குஜராத் மாநில பாஜக.முதல்வர் நரேந்திரமோடி வரவேற்றுள்ளார். விவசாயிகளுக்கும் ராஜ்நாத் சிங்கிற்கும் இடையே நல்லதொடர்பு இருக்கிறது. அவருக்கு இருக்கும் அரசியல் அனுபவமானது மீண்டும் தலைமைபொறுப்பை கொடுத்துள்ளது என டிவிட்டரில் மோடி கூறியுள்ளார்.

 மத்தியில் வாஜ்பாய் தலைமையில் தே.ஜ.,கூட்டணி அரசு இருந்தபோது விவசாய துறை  அமைச்சராக ராஜ்நாத்சிங் பணியாற்றினார். விவசாயிகளுடன் அவர் எப்போதும் தொடர்புவைத்துள்ளார். இதன் மூலம் பாஜக.,வுக்கு பயன் ஏற்படும் என 2வது டிவிட்டரில் கூறியுள்ளார்.

பாஜக பார்லிமெண்டரி கட்சி கூட்டத்தில் தலைவர் பதவியின் போது சிறப்பாக பணியாற்றியதற்கு பாராட்டுதெரிவித்து தீர்மானம் ஒன்றை கட்சியின் மூத்த தலைவர் எல்கே. அத்வானி கொண்டுவந்தார் என பொதுச் செயலாளர் ஆனந்த்குமார் தெரிவித்தார்.

இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப் பட்டதாகவும் குமார் தெரிவித்தார்.  என் மீது குற்றச் சாட்டு எழுந்துள்ளதால் கட்சியை அது பாதிக்கும் என்பதால் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளேன். மேலும் என் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவைகள் என்பதை நிரூபிப்பேன் என நிதீன் கட்காரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...