குஜராத் கலவரவழக்கில் தொடர்புடைய பத்து பேருக்கு தூக்குதண்டனை விதிக்கக்கோரி மனு

 குஜராத் கலவரவழக்கில் தொடர்புடைய பத்து பேருக்கு தூக்குதண்டனை விதிக்கக்கோரி மனு குஜராத் கலவரவழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பாஜக. முன்னாள் அமைச்சர் மாயாகோட்னானி உள்ளிட்ட பத்து பேருக்கு தூக்குதண்டனை விதிக்கக்கோரி மனுத்தாக்கல் செய்ய நரேந்திரமோடி அரசு முடிவு செய்துள்ளது .

குஜராத்தில் கோத்ரா ரயில்_எரிக்கப்பட்ட மறுநாள் 2002ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி நரோடாபாட்டியா எனும் இடத்தில் மிகப்பெரிய வன்முறை வெடித்தது. இதில் சிறுபான்மையினர் பலர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பான வழக்கில் மாயா கோட்னானி, பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட பலர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தவழக்கில் மொத்தம் 70பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோட்னானி, பஜ்ரங்கி உட்பட 32பேரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது.

இதில் கோட்னானிக்கு 28 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பஜ்ரங்கிக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 8 பேருக்கு 31 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 22 பேருக்கு 24 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் குஜராத் மாநில அரசு இந்தவழக்கில் கோட்னானி, பஜ்ரங்கி உட்பட பத்து பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுட்கால சிறை தண்டனையை தூக்குதண்டனையாக மாற்றக்கோரி ஆளும் நரேந்திரமோடி அரசு முறையீடுசெய்ய முடிவு செய்திருக்கிறது. இதற்காக மாநில அரசு, 3 நபர் சட்டவல்லுநர் குழுவை அமைத்துள்ளது.

விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பைஎதிர்த்து 10 பேருக்கு தூக்குதண்டனை விதிக்கக்கோரி குஜராத் அரசு சார்பில் நேற்று ஐகோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல்செய்யப்பட்டது. சீக்கிய கலவரம் நடந்து 30 பது வருடம் ஆகிறது இன்னும் குற்றவாளி யார் என்றே கண்டுபிடிக்கவில்லை , ஆனால் குஜராத் கலவரம் நடந்து பத்து வருடத்திலேயே குற்றவாளிகளை தண்டித்து மேல்முரையிடும் செய்துள்ளது நரேந்திர மோடி அரசு .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...