நரேந்திரமோடி பிரதமாவதை தடுக்க வெளிநாடுகள் சதி செய்கின்றன என இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராம கோபாலன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ;
இந்தியாவின் பாரம்பரிய சின்னமான ராமர்பாலத்தை எக்காரணம் கொண்டும் இடிக்க கூடாது. இந்திய எல்லைப்பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ள நிலையில், சல்மான்குர்ஷித் பேச்சுவார்த்தை நடத்துகிறார் என்பது சரியல்ல. இதில் பேச்சு வார்த்தை நடத்த என்ன இருக்கிறது?. சீனாவை அடித்து விரட்ட வேண்டும். பேச்சுவார்த்தை நடத்துவது பலவீனம்மட்டுமல்ல, நமது கையாளாக தனத்தை காட்டுகிறது. இதனை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பிரதமராக வர வேண்டும். அவர் திறமைசாலி, தகுதியானவர், அவரால் பல பிரச்சனைகளுக்கும் தீர்வுகாண முடியும். நரேந்திரமோடி பிரதமராக வராக்கூடாது என்பதற்காக வெளிநாடுகள் சதிசெய்கின்றன என்றார்.
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.