கிரிக்கெட்டும் Conflict of interestம்

கிரிக்கெட்டும் Conflict of interestம் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசனின் மருமகன்மீது சூதாட்டப்புகார் இருக்கிறது. தன் மருமகனை காப்பாற்ற அவர்முயல்கிறார். இதில் Conflict of interest இருக்கிறது. எனவே உடனடியாக சீனிவாசன் பதவி விலகவேண்டும். சரத்பவார் மீண்டும் வலியுறுத்தல்.

சரியான வாதம். நியாயமானகோரிக்கை. ஆனால் சீனிவாசனை பதவி விலக்கு வதற்காக வைக்கப்படும் இந்த conflict of interest என்கிறவாதம் சீனிவாசனுக்கு மட்டும்தான் பொருந்துமா? அவரை பதவி விலக்கத் துடிக்கும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு இது பொருந்தாதா?

காரணம் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த ஆர் ஆர் பாடில்தான் மஹாராஷ்ட்ர மாநில உள்துறை அமைச்சர். அவர் நேரடிகட்டுப்பாட்டில் வரும் மஹாராஷ்டிர காவல் துறைதான் இந்த கிரிக்கெட் சூதாட்ட புகார்களை விசாரிக்கிறது. சீனிவாசன் மருமகனை கைதுசெய்திருக்கிறது.

சரத்பவாருக்கும் சீனிவாசனுக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகள் தொடர்பில் ஏற்கெனவே தொடர்ச்சியான முன்விரோதம் இருக்கிறது. காரணம் இந்திய கிரிக்கெட்வாரியம் என்கிற பணம்காய்ச்சி மரம் இதுவரை மஹாராஷ்ட்ராவின் சரத்பவார் குமபலின் கட்டுப்பாட்டில்தான் இருந்துவந்தது. வங்காளிகள் சிலர் இதில் இடம்பிடித்திருந்தாலும் இந்தியகிரிக்கெட் என்பது அடிப்படையில் மஹாராஷ்ட்ர மாபியாக்களின் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து இருந்தது என்பதுவரலாறு.

அதில் சீனிவாசன் சின்னஓட்டையை போட்டு உள்ளே புகுந்து அதை முழுமையாக தன்கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். பவார் இதை ஆரம்பத்திலிருந்தே விரும்ப வில்லை. சீனிவாசனை கழுத்தருக்க கருவறுக்க காத்திருந்தார்.

இந்த பின்னணியில், சீனிவாசனை சிக்கலில்சிக்கவைக்க தன் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள மஹாராஷ்ட்ர மாநில காவல் துறையை சரத்பவார் பயன் படுத்துகிறார். எனவே அதுவும் conflict of interest என ஒருவர் சந்தேகம் எழுப்பினால் சரத்பவாரின் பதிலென்ன?

கிரிக்கெட் சூதாட்டத்தில் சீனிவாசனுக்கு நேரடிதொடர்பு இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இதுவரைக்கும் கிடைக்காத நிலையிலும் அவர் தன்மருமகனை காப்பாற்ற தன்பதவியை பயன்படுத்துவார் என்று சரத்பவார் சந்தேகிக்கலாம் என்றால், சீனிவாசனுடனான தன் முன்விரோதத்தை தீர்த்துக்கொள்ள சரத்பவார் தன் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் மஹாராஷ்ட்ர மாநில காவல் துறையை பயன் படுத்துவார் என்று மற்றவர்கள் சந்தேகிக்கலாம் தானே?

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...