தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டுமே நம்பகமான ஆட்சியைத்தர முடியும்

 தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டுமே நம்பகமான ஆட்சியைத்தர முடியும் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.,கூட்டணி அரசின் மீது மக்கள் கோபமடைந்துள்ளனர் , தங்களால்மட்டுமே நம்பகமான மாற்று அரசை தரமுடியும் என பாஜக தெரிவித்துள்ளது.

ஊழல், கொள்கைமுடக்கம், இரட்டை அதிகார மையம் போன்ற பிரச்னைகளில் மத்திய அரசு மூழ்கிக்கிடப்பதால் நாடு பின்னோக்கிசென்று கொண்டிருப்பதா பாஜக குற்றம் சுமத்தியுள்ளது.

கோவா தலைநகர் பனாஜியில் கடந்த இரண்டு நாள்களாக நடந்த பா.ஜ.க தேசியசெயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை முடிந்தது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

ஐ.மு., கூட்டணி தலைமையிலான இரண்டாவது அரசின் நான்கு ஆண்டுகள் நிறைவுவிழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. ஆனால் விழாகொண்டாடும் அளவுக்கு எந்தவித சாதனையையும் இந்த அரசு செய்யவில்லை.

இந்த அரசில் பிரதமர் மன்மோகன்சிங் பெயரளவுக்கு பதவியில் உள்ளார். அதிகாரம்படைத்தவராக அவர் இல்லை. கொள்கைமுடிவு எடுப்பது உள்பட முழு அதிகாரமும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடமே உள்ளது.

ஊழல்: 2ஜி அலைக்கற்றை, காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி, நிலக்கரிச்சுரங்க ஒதுக்கீடு, ஹெலிகாப்டர்பேரம் உள்ளிட்ட பல்வேறு ஊழல்களில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு சிக்கியுள்ளது. இதனால் நாட்டுக்குபேரிழப்பு ஏற்பட்டுள்ளது.

2ஜி ஊழல் விவகாரத்திலும், பிரதமரை கலந்துஆலோசித்த பிறகே எல்லாமுடிவுகளும் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பிரதமர் மன்மோகன்சிங் பொறுப்புவகித்த நிலக்கரி துறையிலேயே ஊழல் நடந்துள்ளதால் , அவரால் ஊழல்குற்றச்சாட்டை மறுக்கமுடியாது. மொத்தத்தில் மத்திய அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள்.
இந்த அரசை வீட்டுக்குஅனுப்ப விரும்புகின்றனர். இந்த அரசுக்கு மாற்றாக பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டுமே நம்பகமான ஆட்சியைத்தர முடியும் என்று மக்கள் கருதுகின்றனர் என்று அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...