சிபிஐ தொடர்பாக மத்திய அமைச்சரவையின் முடிவு, குழப்பத்தை உருவாக்கும்

 சிபிஐ தொடர்பாக மத்திய அமைச்சரவையின் முடிவு, குழப்பத்தை உருவாக்கும் சிபிஐ.,யை சுதந்திர அமைப்பாக மாற்றும் வகையிலான , மத்திய அமைச்சரவையின் முடிவு, குழப்பத்தை உருவாக்கும் என்று ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க, மூத்த தலைவரும், ராஜ்யசபா எதிர்கட்சி தலைவருமான அருண்ஜெட்லி இது குறித்து மேலும் தெரிவித்ததாவது: சிபிஐ.,யில் அரசியல் தலையீட்டினை குறைக்கும் வகையில், மத்திய அமைச்சரவை எடுத்துள்ளமுடிவால் எவ்விதபலனும் ஏற்படப் போவதில்லை; மாறாக குழப்பத்தைதான் ஏற்படுத்தும். ஐமு., கூட்டணி அரசு, சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங், பகுஜன் சமாஜ்கட்சி தலைவர் மாயாவதி உள்ளிட்டோர் மீது ஊழல்வழக்கு விசாரணை என்ற பெயரில், சிபிஐ.,யை தவறாக பயன் படுத்துகிறது. சிபிஐ.,யின் செயல் பாடுகளை கண்காணிக்க, ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கியகுழுவை அமைப்பது, அரசியல் ரீதியாக சிபிஐ.,யை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது போன்று ஆகும்.

இந்த நடவடிக்கையை அனைவரும் எதிர்க்கவேண்டும். அரசு தேர்ந்தெடுக்கும், ஓய்வுபெற்ற நீதிபதிகளால் நம்பிக்கையை ஏற்படுத்தமுடியாது. ஓய்வுபெறுவதற்கு முன் அரசுக்கு நெருங்கமாக இருந்தவர்கள்தான், ஓய்வுக்கு பிறகு பதவிபெறுகின்றனர். இவ்வாறு நியமிக்கப்படுபவர்கள் அரசாங்கத்திற்கு விசுவாசமானவர்களாக இருப்பர்.
சிபிஐ., தொடர்பான வழக்கில், சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல்செய்ய இருக்கும் அறிக்கையில், தேர்வுகமிட்டி தெரிவித்த பரிந்துரைகள், ஜனவரி 31ம் தேதி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு மற்றும் மற்றகட்சிகள் தெரிவித்த ஆலோசனைகளை முன் வைக்கவேண்டும். அப்போதுதான், அரசியல் தலையீடுகளில் இருந்து சிபிஐ.,யை காக்கமுடியும்.என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...