கேரளாவில், பதிமூன்று வருடங்களுக்கு முன்பு பாஜக-வின் இளைஞரணி தலைவரும், ஆசிரியருமான கேடி. ஜெய கிருஷ்ணன், தனது வகுப்பறையில் மாணவர்கள் கண்ணெதிரிலேயே படுகொலைசெய்யப்பட்ட வழக்கை மறு விசாரணை செய்யுமாறு சிபிஐ அமைப்பை அம்மாநில அரசு கேட்டுக்
கொண்டுள்ளது. அரசியல் முக்கியத்துவம்வாய்ந்த இந்த வழக்கில், உண்மை குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பித்துள்ளதாக சமீபத்தில் எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து , இந்த வழக்கை மறு விசாரணை செய்வதற்கான கோரிக்கையை முதல்வர் உம்மன்சாண்டி சிபிஐ-யிடம் அதிகார பூர்வமாக அளித்துள்ளதாக அரசுவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 1999-ல் இந்தியகம்யூனிஸ்டு (மார்க்ஸிஸ்டு) தொண்டர்களால், கே.டி. ஜெய கிருஷ்ணன் படுகொலைசெய்யப்பட்ட வழக்கு, வேறு ஒருவழக்கில் சிக்கியதொண்டர் ஒருவர், உண்மை கொலையாளிகளை தங்கள்கட்சி சட்டத்தின் பார்வையிலிருந்து மறைத்து வைத்திருப்பதாக கூறியதால் பரபரப்பானதிருப்பத்தை சந்தித்தது. இந்த தகவலை அடிப்படையாக கொண்டு, கேரள காவல்துறையின் குற்றப்பிரிவிடம் இந்த வழக்கை ஒப்படைப்பது என்று அம்மாநில அரசு முதலில் முடிவுசெய்தது. ஆனால் அரசியல் ரீதியான சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்காக, தற்போது சிபிஐ-யை அரசு நாடியுள்ளது.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.