சீனா மீது உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்

 இந்திய எல்லைக்குள் தொடர்ந்துவரும் சீன ஊடுருவல்களை தடுக்க இந்தியா கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் பல்வேறுகட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

மாநிலங்களவையில் இதுதொடர்பாக பாஜக உறுப்பினர் ஜகத் பிரகாஷ் நத்தா பேசும் போது, அருணாசல பிரதேசத்தில் சக்லகாம் பகுதியில் சீனராணுவத்தினர் ஊடுருவியுள்ளனர். இந்திய எல்லைப்பகுதிக்கும் 20 கிலோமீட்டர் வரை இவர்கள் ஊடுருவியிருக்கின்றனர்.

ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற மற்றொருசம்பவத்தில், 25 சீனராணுவத்தினர் இந்தியபகுதிக்குள் நுழைந்துள்ளனர். இந்தசம்பவம் ஆகஸ்ட் 13ஆம் தேதிதான் நமதுகவனத்துக்கு வந்துள்ளது. ஆகஸ்ட் 15-ஆம் தேதி அப்பகுதியில் அதிக அளவில் இந்திய ராணுவவீரர்கள் குவிக்கப்பட்டதை தொடர்ந்து, சீனவீரர்கள் வெளியேறினர்.

இந்நிலையில், ஆகஸ்ட் 19-இல் அதேபகுதியில் சீனர்கள் மீண்டும் ஊடுருவி கூடாரமிட்டுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் சீனராணுவத்தினர் 600முறை இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளனர். இதில் கடந்த 8 மாதங்களில்மட்டும் 150 முறை ஊடுருவியுள்ளனர். இதுமிகவும் தீவிரமான பிரச்னையாகி வருகிறது. சீனாமீது அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

திரும்ப திரும்ப நடைபெற்றுவரும் ஊடுருவல்களைத் தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த விஷயம் தொடர்பாக அரசு அவசர கால நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாஜக உறுப்பினர் ரவிசங்கர்பிரசாத் கூறினார்.

இந்தவிவகாரத்தில் இந்திய நிலைப்பாடு, கொள்கை என்ன என்பதை வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் விளக்கவேண்டுமென சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் நரேஷ் அகர்வால் கூறினார்.

சீன ஊடுருவல் விவகாரத்தை அவையில் விவாதிக்கவேண்டும் என உறுப்பினர்கள் கோரிய போது, அதுதொடர்பாக நோட்டீஸ் அளிக்குமாறு அவையின் துணைத்தலைவர் பிஜே.குரியன் தெரிவித்தார்.

சீனா மீது அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என பா.ஜ.க உறுப்பினர் ஜகத்பிரகாஷ் நத்தா தெரிவித்த கருத்துக்கு பல்வேறு கட்சிகளைச்சேர்ந்த உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...