நாளுக்கொரு ஊழல் வெளிவருவதில் தற்போது ரயில்வேயில் ஏற்றுமதிக்கான கட்டணங்கள் வசூலிக்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் .இதில் மத்திய அரசுக்கு ரூ. 50 ஆயிரம் கோடிவரை இழப்பு ஏற்ப்பட்டிருக்களாம் என்று தணிக்கைதுறை கணக்காயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.
சமீபகாலமாக மத்திய அரசு பல்வேறு ஊழல் முறை கேட்டில் சிக்கி பெரும் தலைக் குனிவை சந்தித்துவந்துள்ளது. இந்நிலையில் ரயில்வேயில் ஒரு புதிய ஊழல்பூதம் கிளம்பியிருக்கிறது.
ரயில்வே ஏற்றுமதி சரக்குகட்டணத்தில் குறைத்து வசூலித்து மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது உள்நாட்டுபயனீட்டுக்கு போக ஏற்றுமதியை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு இரட்டைமுறையை பயன்டுத்தியது, இதன்படி இரும்பு உருக்கு ஏற்றுமதி செய்தவர்களிடம் குறைந்தகட்டணம் வசூலித்து இதில் பல அதிகாரிகள் ஆதாயம் அடைந்துள்ளனர்.
இந்தவகையில் ரூ. 17 ஆயிரம்கோடி வரை ஊழல் நடந்திருப்பதாகவும், அரசுக்கு ரூ. 50 ஆயிரம்கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கும் என்றும் கணக்காயம் (சி.ஏ.ஜி ) தனது அறிக்கையில் கூறியுள்ளது.
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
Leave a Reply
You must be logged in to post a comment.