மன்மோகன்சிங்கிடம் முறையிடுவதும் ராஜபக்சேவிடம் முறையிடுவதும் ஒன்றே

 ஈழத்தமிழர்களின் நலன் குறித்து மன்மோகன்சிங்கிடம் முறையிட்டாலும், ராஜபக்சேவிடம் முறையிட்டாலும் இரண்டும் ஒன்று தான் என பாஜக மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

.சென்னையில் நிருபர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:''வீடுதோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை'' என்ற தலைப்பில் தமிழகத்தில் இருக்கும் 12,650 கிராமங்களில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம். இந்தபிரசாரம் வரும் நாடாளுமன்ற தேர்தலில், பாஜக.,வுக்கு வெற்றிவாய்ப்பை ஏற்படுத்திகொடுக்கும். டிசம்பர் 1ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை இப்பிரசாரம் நடைபெறும். இரும்புமனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை அமைக்க தேவைப்படும் இரும்பு, நாட்டில் உள்ள விவசாயிகள் பயன் படுத்தி, தற்போது பயன்பாட்டில் இல்லாத இரும்புதுண்டுகளை சேகரித்து அவற்றை பாஜக. மண்டல மற்றும் மாவட்ட அலுவலகங்களில் சேகரித்துவைத்து பின்னர் குஜராத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

இலங்கை தமிழர் பிரச்சனையில் டெல்லியில் இருக்கும் பாஜக தலைவர்களுக்கும், தமிழக மாநில பாஜக.வுக்கும் ஒரேநிலைபாடுதான். டெல்லியில் ஒருநிலைபாடு தமிழகத்தில் ஒருநிலைபாடு கிடையாது. இப்பிரச்னை தொடர்பாக அகில இந்திய தலைவர்களிடம் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டியது குறித்து, அகில இந்திய பாஜக . தலைவர் மற்றும் நிர்வாகிகளிடம் எடுத்துரைப்போம். காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாசார்பில் பிரதமர் மட்டுமில்லை, இந்தியாவில் இருந்து ஒருபியூன்கூட கலந்துகொள்ள கூடாது என்பதுதான் பா.ஜ.க வின் நிலை. இதுதொடர்பாக நாங்கள் பிரதமரிடம் நேரில் முறையிட விரும்பவில்லை. காரணம் மன்மோகன்சிங்கிடம் முறையிடுவதும், ராஜபக்சேவிடம் முறையிடுவதும் ஒன்றுதான். தமிழர் இன அழிப்பு நடத்திய விஷயத்தில் இருவரும் கூட்டு குற்றவாளிகள்தான். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...