காங்கிரஸ்க்கு மோடி ஒரு சவால் அல்ல அதன் ஊழலே சவால்

 காங்கிரஸ் கட்ச்சியை சேர்ந்த ஒரு மந்திரி மோடி காங்கிரசுக்கு மிகப்பெரிய சவால் என்கிறார் , மற்றொரு மந்திரி மோடி ஒரு சவால் அல்ல என்கிறார். ஆனால் அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக விளங்குவது அவர்களது திறமையின்மையும், ஊழலும்தான் என்று பா.ஜ.க துணைத் தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்:-

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்ததாவது; காங்கிரஸ் கட்சியின் ஒருமந்திரியான ப.சிதம்பரம், மோடி காங்கிரசுக்கு மிகப் பெரிய சவாலாக விளங்குவார் என்று கூறுகிறார். அதேநேரத்தில், மற்றொரு மந்திரி சுஷில் குமார் ஷிண்டே, மோடி ஒருசவால் அல்ல என்கிறார். வரும் சட்ட மன்றம் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் தோற்கடிக்கப்படுவோம் என்கிறபயத்தால் காங்கிரஸ் தலைவர்கள் மன அழுத்தத்தில் உளறிவருகின்றனர்.

அவர்களுக்கு சிலநல்ல மருத்துவனைகளில் சிகிச்சை அளிக்க வேண்டும். உண்மையில் காங்கிரசுக்கு மிகப் பெரிய சவாலாக விளங்குவது அவர்களது திறமையில்லாத ஆட்சியும், ஊழலும்தான். இந்நிலையில் மோடி, ஒருவலிமையான தலைமையாகவும், சாத்தியமான ஒருமாற்றாகவும் விளங்குவதால், பாஜக நிச்சயம் காங்கிரசின் தவறான ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கும்.

இதன்காரணமாக, காங்கிரஸ் ஒரு எதிர் மறையான அரசியலில் ஈடுபட்டுவருகிறது. மக்களின் பணத்தை கொள்ளையடித்தல், திறமையில்லா நிர்வாகம், தீவிரவாதம், வேலையின்மை, பண வீக்கம் போன்ற காரணங்களால் கோபமடைந்துள்ள மக்களை சமாதானப்படுத்த அர்த்தமற்ற, ஒவ்வாத அறிக்கைகளை அவர்கள் வெளியிட்டுவருகின்றனர் என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...