தருண்தேஜ்பாலை பாதுகாக்க மத்திய அமைச்சர் முயற்சி

 பாலியல்புகாரில் சிக்கிய தெகல்காபத்திரிகை ஆசிரியர் தருண்தேஜ்பாலை பாதுகாக்க மத்திய அமைச்சர் ஒருவர் முயற்சிக்கிறார்” என சுஷ்மாசுவராஜ் குற்றம் சுமத்தியுள்ளார்.

தெகல்கா ஆசிரியர் தருண்தேஜ்பால் மீது அவருடன் பணியாற்றிய பெண் நிருபர் ஒருவர் பாலியல்புகார் கூறினார். இதை தொடர்ந்து , தெகல்கா ஆசிரியர் பொறுப்பில் இருந்து தேஜ்பால் விலகினார். அவர் மீது தெகல்கா நிறுவனம் எடுத்த நடவடிக்கை திருப்தி அளிக்காததால், பெண்நிருபரும் தனது வேலையை ராஜினாமா செய்தார். கோவாவில் இந்த சம்பவம் நடந்ததால், இதுகுறித்து விசாரணையில் கோவா குற்றப் பிரிவு போலீசார் ஈடுபட்டனர். தேஜ்பால் மீது கோவாபோலீசார் பலாத்கார வழக்கு பதிவுசெய்தனர்.

கோவா போலீசார் நேற்று முன்தினம் மும்பைசென்று பெண் நிருபரிடம் வாக்குமூலம் பதிவுசெய்தனர். அவர் கோவாவந்து நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் அளிக்க சம்மதம் தெரிவித்தார். அதன்படி, அவர் நேற்று கோவா வந்தார். விசாரணை அதிகாரிமுன் இன்று மாலை 3 மணிக்குள் ஆஜராகுமாறு தருண்தேஜ்பாலுக்கு கோவா போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த விஷயத்தில் கோவாமுதல்வர் தேவையற்ற அக்கறை செலுத்துவதாகவும் , இந்தவழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தேஜ்பால் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து கருத்துதெரிவித்த பாஜக. மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, ”குற்றத்திலிருந்து எளிதில்தப்பிக்க தேஜ்பால் வழிதேடுகிறார். காங்கிரசுக்கு தேஜ்பாலை பிடிக்கும். அவருக்கு காங்கிரசைபிடிக்கும்” என்றார்.

இந்நிலையில், ”தேஜ்பாலை பாதுகாக்கும் முயற்ச்சியில் தெகல்கா பத்திரிகையை நிறுவிய மத்தியஅமைச்சர் ஒருவர் ஈடுபட்டுள்ளார். அவருக்கு தெகல்காவில் பங்குகள் உள்ளன” என மக்களவை எதிர்க் கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் குற்றம் சுமத்தியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...