நரேந்திரமோடி மீது மனிதவெடிகுண்டு தாக்குதல் நடத்த சிமி தீவிரவாதிகள் சதித்திட்டம்

 குஜராத் முதல்வரும் பா.ஜ.க.,வின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி மீது மனிதவெடிகுண்டு தாக்குதல் நடத்த சிமி தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருந்தது தெரியவந்துள்ளது.

பீகார் தலைநகர் பாட்னாவில் நரேந்திரமோடி பேசிய மைதானம், பாட்னா ரயில்நிலையம் ஆகிய இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 6 பேர்பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவந்த தேசிய புலனாய்வு படையினர் சத்தீஸ்கர்மாநிலம் ராய்பூரை சேர்ந்த உமர்சித்திக் மற்றும் அப்துல்வாஹித் ஆகிய இருவரை கைதுசெய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இந்திய இஸ்லாமிய மாணவ அமைப்பான சிமி இயக்கத்தைசேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

காவல்துறையிடம் அவர்கள் அளித்த வாக்கு மூலத்தில், சிமி அமைப்பைசேர்ந்த மனித வெடி குண்டுகள் மோடிமீது தாக்குதல் நடத்த திட்டம்தீட்டி உள்ளனர். இந்த திட்டத்தை நிறைவேற்ற மோடிபேசும் பொதுக்கூட்ட மேடைகளின் அருகில் நின்று அவரது ஒவ்வொரு அசைவையும் மனிதவெடிகுண்டுகள் தீவிரமாக கண்காணித்து மோடியை கொல்ல தக்கநேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்று கூறியுள்ளனர். மோடியைகொல்ல முஜாகிதீன் மற்றும் சிமி தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத் துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...