தில்லியில் மறுதேர்தலை சந்திக்க தயார்

 தில்லியில் மறுதேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக தில்லி பிரதேச பா.ஜ.க தலைவர் விஜய்கோயல்.தெரிவித்துள்ளார் மேலும், கட்சியினர் தொகுதிகளுக்கு சென்று தேர்தல்பணிகளை தொடங்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: “வேஷம் கலைந்து விடுமோ என்ற அச்சத்தில் ஆட்சியமைக்க மறுத்து வரும் ஆம் ஆத்மிகட்சியால், தில்லியில் இன்னொருதேர்தல் வர உள்ளது. அந்த தேர்தலை சந்திக்க பாஜக தயாராகவே உள்ளது. பாஜக தொண்டர்கள் மக்களிடம்சென்று தேர்தல் பணிகளை தொடங்கவேண்டும்.

தேர்தல் பிரசாரத்தை மூன்றுவழிகளில் மேற்கொள்ள இருக்கிறோம். நவீன ஊடகங்கள், பொதுக் கூட்டங்கள் மற்றும் வீடு, வீடாகச்சென்று வாக்கு சேகரிப்பது ஆகியவற்றை செய்ய உள்ளோம் . பாஜக வெற்றிபெற்ற தொகுதிகளில் கட்சியினர் வெற்றிக்கூட்டங்கள் நடத்துவார்கள். தோல்வியடைந்த தொகுதிகளில் நன்றிதெரிவிக்கும் கூட்டங்களை நடத்துவார்கள்.

இளைஞர்கள் மற்றும் மகளிர்நலன்களில் மேலும் சிறப்புக்கவனம் செலுத்தும் வகையில், கட்சியில் உள்ள இளைஞர், மகளிர் பிரிவினரின் செயல்பாடுகளை அதிகப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்க்கொள்வோம்’ என்று விஜய்கோயல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...