வெளிப்படையாக லஞ்சம்வாங்கிய வீரபத்ரசிங் மீது சிபிஐ விசாரணை நடத்தப்படவேண்டும்

 தனியார் மின் நிறுவனத்திடம் இருந்து வெளிப்படையாக லஞ்சம்வாங்கிய இமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ரசிங் மீது சிபிஐ விசாரணை நடத்தப்படவேண்டும் என பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி கோரிக்கை விடுத்துள்ளார். .

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: இமாசலப் பிரதேசத்தில் தனியார் மின்சார நிறுவனத்தின் திட்டவிரிவாக்கத்துக்கு ஒப்புதல் அளிப்பதற்காக முதல்வர் வீரபத்ரசிங் ரூ.1.5 கோடி மற்றும் ரூ.2.4 கோடியை அடுத்தடுத்து லஞ்சமாக பெற்றுள்ளார். அந்நிறுவன உரிமையாளரிடம் இருந்து இந்தப்பணத்தை தம் பெயரிலும் மனைவி பிரதீபாசிங் பெயரிலும் காசோலைகளாக அவர் வாங்கியுள்ளார்.

இது தவிர, அந்த மின்சாரநிறுவன உரிமையாளர் நடத்தும் மற்றொரு நிறுவனத்தில் வீரபத்ரசிங்கின் மனைவியும் பிள்ளைகளும் பங்குதாரர்களாக்கப்பட்டுள்ளனர்.

அவரது நிறுவனத்துக்கு மாநிலஅரசு அளித்த ஒப்புதலுக்காக முதல்வர் குடும்பத்தினருக்கு நிறுவனத்தில் பங்குகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தவிவகாரம் தொடர்பாக பிரதமருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். இந்த வெளிப்படையான ஊழல்தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் என்ன நடவடிக்கை எடுக்க உள்ளனர் என்பதை அறியவிரும்புகிறேன்.

இது காங்கிரஸ்கட்சிக்கும் சோனியா மற்றும் ராகுலுக்கும் வைக்கப்பட்டுள்ள பரிசோதனையாகும். இந்த ஊழல்தொடர்பான உண்மைகளை கண்டு அவர்கள் கோபத்தை காட்டுவார்களா? சமீபத்தில் ஆதர்ஷ்ஊழல் விவகாரத்தில் அவர்கள் காட்டியகோபம் வெறும் நாடகமா? உண்மையான மன வெளிப்பாடுதானா? என்பது இந்தவிவகாரத்தில் அவர்கள் எடுக்கும் நடவடிக்கையே காட்டும் என்றார் அருண் ஜேட்லி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...