ப.சிதம்பரத்தின் பதில், நரேந்திர மோடியின் விமர்சனத்தை உறுதிப் படுத்துகிறது

 மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அளித்தபதில், நரேந்திர மோடியின் விமர்சனத்தை உறுதிப் படுத்துகிறது . முதலில் தோல்வி என்றும், பிறகு வெற்றிஎன்றும் அறிவிக்கப்பட்டதன் மர்மம் விசாரணையில் தெரியவரும் என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது :

சென்னை அருகே வண்டலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை நரேந்திர மோடி நாகரிகமான முறையில் மறுவாக்கு எண்ணிக்கை அமைச்சர் என விமர்சனம்செய்தார். இதற்குப் பதில் அளித்த மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மறுவாக்கு எண்ணிக்கைக்குதான் கோரியதாகவும், ஆனால், தனது கோரிக்கையை ஏற்காமல் தன்னை வெற்றிபெற்றதாக தேர்தல் அலுவலர்கள் அறிவித்துவிட்டனர் என்றும் தெரிவித்திருந்தார்.

இதன் மூலம், மோடியின் விமர்சனம் உண்மை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் தோல்வி என்றும், பிறகு வெற்றிஎன்றும் அறிவிக்கப்பட்டதன் மர்மம் விசாரணையில் தெரியவரும்.

சென்னை கூட்டத்துக்கு முன்னதாகவே கூட்டணி பேச்சு வார்த்தையை முடித்துக்கொண்டு, அனைத்துக் கூட்டணித் தலைவர்களையும் நரேந்திரமோடியின் கூட்டத்தில் பங்கேற்கச் செய்வதன் மூலம் தேர்தல் பிரசாரத்தை தொடங்கத் திட்டமிட்டோம். ஆனால், கூட்டணிகுறித்து முடிவு செய்யப்படாததால், அது நிறைவேறவில்லை. கூட்டணிக்காக பாஜக அவசரப்படவில்லை.

பாஜக, திமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் ஒரேகூட்டணியில் சேருவதாகக் கூறப்படுவது கற்பனை. கூட்டணியில் சேருவது குறித்து தே.மு.தி.க நல்ல அறிகுறியை தெரிவித்துவருகிறது. தமிழகத்தில் அதிமுக, திமுக கூட்டணிக்கு மாற்றாக பா.ஜ.க கூட்டணி அமையும். இந்த தேர்தலில் பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தான் போட்டி.

மூன்றாவது அணியமைக்க முயற்சிப்பது முழுமை அடையாது. அதில், எல்லா கட்சிகளும் சேருமா என்பது தெரியாது. அவ்வாறு மூன்றாவது அணியமைந்தால், அதில் யார் பிரதமர் என அவர்களால் கூறமுடியாது. நாடு நலம்பெற நிலையான ஆட்சி தேவை.

காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பு வாக்குகள் பாஜகவுக்கு கிடைக்கக்கூடாது என்ற நோக்கில் தொடங்கப்பட்டது ஆம் ஆத்மிகட்சி. அவர்களுக்கு நிர்வாகம் செய்யத்தெரியவில்லை. ஜன லோக்பாலை நிறைவேற்ற தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு விருப்பம் இல்லை. இதனால், மத்திய அரசின் மீது பழிபோட்டு பிரச்னைகளை தள்ளிப் போடுகிறார் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...