சர்தார் வல்லபாய்படேல் சிலைக்கு தமிழகத்தில் இருந்து மண், இரும்பு அனுப்பப்பட்டது

 உலகத்திலேயே பெரியசிலையாக குஜராத் மாநிலத்தில் அமைக்கப்படும் சர்தார் வல்லபாய்படேல் சிலைக்கு தமிழகத்தில் இருந்து மண், இரும்பு நேற்று அனுப்பப்பட்டது.

குஜராத் மாநிலம் ஆமதாபாத் அருகே, உலகத்திலேயே பெரியசிலையாக 182 மீட்டர் உயரத்தில் சர்தார் வல்லபாய்படேல் சிலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக, நாடுமுழுவதும் உள்ள கிராமங்களில் இருந்து மண்ணையும், அங்குள்ள மக்களிடமிருந்து இரும்பையும் பாஜக.வினர் பெற்று வருகின்றனர்.

தமிழகம் முழுவதிலும் கிராமங்கள்தோறும் பெறப்பட்ட மண் மற்றும் இரும்பு ஆகியவை குஜராத் மாநிலத்திற்கு அனுப்பிவைக்கும் நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் உள்ள சர்தார் வல்லபாய்படேல் சிலை அருகே நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பாஜக. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், தேசியசெயலாளர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். நிகழ்ச்சியில், பாஜக. தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவிடம் தமிழக கிராமங்களில் இருந்து பெறப்பட்ட மண் மற்றும் இரும்பு ஆகியவற்றை மாநிலநிர்வாகிகள் வழங்கினார்கள்.

நிகழ்ச்சி குறித்து, பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் நிருபர்களிடம் கூறியதாவது:–

நவபாரத சிற்பியும், ஆங்கிலேயர்கள் விட்டுச்சென்ற 500 சமஸ்தானங்களை ஒன்றிணைத்த வருமான சர்தார் வல்லபாய்படேல் பெயரை போற்றும் வகையில், அவருக்கு குஜராத் மாநிலம் ஆமதாபாத் அருகே 182 மீட்டர் உயரத்தில், உலகத்திலேயே மிகப் பெரிய சிலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக, தமிழகம் முழுவதிலும் இருந்து 10,743 கிராமங்களில் இருந்தும், 1406 நகரங்களில் இருந்தும் மண் மற்றும் இரும்புபெறப்பட்டுள்ளன. இந்தபொருட்கள் அனைத்தும் குஜராத் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...