காங்கிரஸ் ஊழல் கட்சி . ஆம் ஆத்மி அராஜகக் கட்சி

 நரேந்திர மோடியை பிரதமராக்க தில்லியில் 7 மக்களவை தொகுதியிலும் வெல்வதே இலக்கு. காங்கிரஸ் கட்சி ஊழல் தொடர்புடைய கட்சி. ஆம் ஆத்மி அராஜகக் கட்சி. இவ்விரு கட்சிகளால் பாஜகவுக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தில்லி பிரதேச பாஜக தலைவர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

புதிய பொறுப்பை வியாழக் கிழமை ஏற்றுக் கொண்ட பிறகு, செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:

தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றிபெறும் வகையில் கட்சி திட்டமிட வேண்டும் என்று எங்கள் கட்சியின் மூத்தத் தலைவர்களிடம் கூறிவருகிறோம். இதையொட்டி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். தேர்தல்பிரசாரத்தை தில்லி பாஜக.,வினர் ஏற்கெனவே தொடங்கிவிட்டனர். காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு எதிராக வீடுவீடாக சென்று பிரசாரம் செய்துவருகிறோம். 49 நாள் ஆட்சியின்போது ஆம் ஆத்மி கட்சியின் உண்மை முகம் வெளிப்பட்டு விட்டது. அக்கட்சிக்கு வெளிநாட்டிலிருந்து நிதிபெருகுவதும் மக்களுக்கு தற்போது தெரியவந்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டேயின் மீது வழக்குத்தொடராமல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மீது வழக்குப் பதிவு செய்திருப்பது ஆம் ஆத்மியின் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது.

இதுபோன்று பல்வேறு விவகாரங்களில் ஆம் ஆத்மி இரட்டை நிலையை கொண்டுள்ளது. இதன்மூலம் தில்லி மக்களிடம் பொய்சொல்லி, அவர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டனர். காங்கிரஸ் கட்சி ஊழல் தொடர்புடைய கட்சி. ஆம் ஆத்மி அராஜகக் கட்சி. இவ்விரு கட்சிகளால் பாஜகவுக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...