டெல்லி இமாமை சந்தித்து மதரீதியாக வாக்குகேட்ட காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் பாஜக மனு தந்துள்ளது.
தேர்தலில் வாக்குகள் சிதறிவிடக் கூடாது என்றும் அதற்காக உதவுமாறும் இமாமிடம் சோனியாகாந்தி கேட்டுக்கொண்டதாக புகார்மனுவில் பாஜக குறிப்பிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், மதரீதியாக பிரச்னையை கிளப்பி அதன் மூலம் தேர்தலில் ஆதாயம் அடைய நினைப்பதாகவும் .சாதி மற்றும் மதரீதியாக வாக்குகளை சேகரிக்கக் கூடாது என நடத்தை விதியில் கூறப்பட்டிருப்பதையும் பாஜக சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த ஒன்றாம் தேதி டெல்லி இமாமை சோனியாகாந்தி சந்தித்துப் பேசியதை தொடர்ந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக புகார் அளித்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கமுடியும் என தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் கூறியதையடுத்து, பாஜக சார்பில் முறைப்படி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.