பாகிஸ்தான் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களின் வலியை நாங்கள் உணர்ந்துள்ளோம்

 ஜம்மு-காஷ்மீர் பகுதியிலுள்ள போரால் பாதிக்கப்பட்ட அகதிகளின் பிரச்னைகளை குறிப்பிட்ட கால வரையறைக்குள் தீர்த்துவைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க.,வின் தலைவராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஜம்மு-காஷ்மீரின் எல்லைப் பகுதி மாவட்டங்களில் அவர் திங்கள் கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது ஆர்.எஸ்.புரா மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் அமித்ஷா கூறியதாவது:

இந்தியா-பாகிஸ் தான் இடையேயான 1947, 1965 மற்றும் 1971ஆம் ஆண்டு போர்களின்போது பாதிக்கப்பட்ட அகதிகளின் பிரச்னைகளை விரைவில் தீர்த்துவைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தான் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களின் வலியை நாங்கள் உணர்ந்துள்ளோம்.

பாகிஸ்தானின் தாக்குதல்களுக்கு தக்கபதிலடி கொடுக்க பாதுகாப்பு படையினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தான் தாக்குதல்களை பொறுத்துக்கொள்ள முடியாது.

ஜம்மு காஷ்மீரிலுள்ள போரால் பாதிக்கப்பட்டுள்ள அகதிகள் இலவச வீட்டு மனைகள் வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மாநில அரசே வீட்டுமனைகளை வழங்கமுடியும்.

எனினும், மனம் தளர்ந்து விட வேண்டாம். ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா ஆட்சியின் நாள்கள் எண்ணப்பட்டு வருகின்றன. விரைவில் இங்கு நடை பெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று, பாஜக தலைமையிலான புதிய அரசு மலரும்.

ஜம்மு காஷ்மீரை கடந்த 60 ஆண்டுகளாக ஆண்ட பல்வேறு அரசுகள், மாற்றாந் தாய் மனப் பான்மையுடன் செயல்பட்டு மக்களுக்கு பல்வேறு அநீதியை இழைத்துள்ளன. பா.ஜ.க ஆட்சிக்குவந்தவுடன் அவை சரி செய்யப்படும். ஜம்மு காஷ்மீர் உள்பட நாடுமுழுவதும் "காங்கிரஸ் அல்லாத இந்தியா'வை உருவாக்க பாஜக போராடி வருகிறது என்று அமித் ஷா கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...