டாஸ்மார்க்கில் மட்டுமே பாஸ்மார்க்

 தமிழக அரசு டாஸ்மாக் விற்பனையில் மட்டுமே பாஸ்மார்க் வாங்கியுள்ளது தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடியில் மேயர்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்திர ராஜன் தூத்துக்குடி பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் 1967க்கு பிறகு தேசிய எழுச்சி என்பது பாஜக.,வினால் உருவாகி இருக்கிறது. முதல்வர் தூத்துக்குடிக்கு வந்தபோது தேசிய கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். தேசியகட்சிகள் உள்ளாட்சி பதவிக்கு போட்டியிட கூடாதா, பரீட்சை எழுதினால் தான் பாஸ் ஆகமுடியும். தேர்தலில் போட்டியிட்டால் தான் வெற்றி, தோல்வி பற்றி தெரியும்.

முதல்வர் தேர்தலில் யாரும் போட்டியிடகூடாது என்கிறார். இது என்ன நியாயம். தேர்தலில் போட்டியிடுவது ஜனநாயக உரிமை. நாங்கள் உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமல்ல முதல்வர் தேர்தலிலும் போட்டியிடுவோம்.

இங்கு அதிமுகவுக்கு அமைச்சர்கள் வந்துதான் வாக்குகள் வாங்கவேண்டிய நிலை உள்ளது. எங்கள் கட்சி மத்திய அமைச்சர்கள் அவர்கள் தொகுதியில் மக்கள்பணியில் மட்டுமே கவனம்செலுத்தி வருகின்றனர். ஆனால் அதிமுக அரசு டாஸ் மாக்கை மட்டுமே கவனித்து பாஸ்மார்க் வாங்கியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் ஆதரவு ஆளும் கட்சிக்கு உள்ளது. எங்கள் கட்சி வேட்பாளர் பிரபாகரன் என்பவர் அதிமுகவினரால் கடத்தப்பட்டுள்ளார் என தேர்தல் ஆணையத்தில் புகார்செய்தால் அதிகாரிகல் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருந்துகொண்டு வேட்பாளர் வீட்டில் இருக்கிறார் என்று கூறுகின்றனர்.

அதிமுகவுக்கு தொடர்ந்து வாக்களித்து என்ன சாதனை செய்ய போகிறேர்கள். என்று கேள்வி எழுப்பினார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

ஓட்டு வங்கிக்காக வக்ப் சட்டத்த� ...

ஓட்டு வங்கிக்காக வக்ப் சட்டத்திற்கு எதிர்ப்பு; மம்தா மீது அமித் ஷா குற்றச்சாட்டு முஸ்லிம் ஓட்டு வங்கியை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக 'ஆபரேஷன் ...

துணிச்சலாக பணியாற்றிய பெண் அதி� ...

துணிச்சலாக பணியாற்றிய பெண் அதிகாரிக்கு விருது 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது, ஜம்மு - காஷ்மீரின் ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மருத்துவ செய்திகள்

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...