மீண்டும் இந்தியா உலகின் மிகப்பெரிய சக்தியாக மாறும்

 மீண்டும் இந்தியா உலகின் மிகப்பெரிய சக்தியாக மாறும். சீனாவை விட சக்தி மிக்க நாடாக இந்தியா மாறுவதற்கு எல்லா வாய்ப்புகளும் உள்ளன. நம் நாட்டில் உள்ள 1.25 பில்லியன் மக்கள்தொகையில் தொழில்முனைவோர்களின் திறமைகளை முறையாக பயன்படுத்தினால் இது நிச்சயம் நடக்கும்.

ஒரு நேரத்தில் இந்தியா 'கோல்டன் பேர்டு' என்றழைக்கப்பட்ட நாடுதான். ஆனால், இப்போது நாம் அந்த உயர்ந்த நிலையில் இருந்து கீழே விழுந்து விட்டோம். ஆனால், நாம் மீண்டு எழுவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்தியா மற்றும் சீனா இரண்டும் ஒரே நேரத்தில் வளர்ச்சி காணப்போவதை நீங்கள் இனி பார்க்கப் போகிறீர்கள்.

உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த இருநாடுகளின் பங்களிப்பு தொடர்ந்து அதிகமாகிக் கொண்டே வருகிறது. சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்தியா ஒன்றும் சீனாவை விட குறைந்து போய்விடவில்லை. இந்தியாவில் உள்ள தொழில்முனைவோர்களின் திறமைகளை நான் அறிவேன். அவற்றை முறைப்படுத்தும் திட்டங்கள் என்னிடம் உள்ளன. ஜனநாயக நாடுகளும் வளர்ந்து வருகின்றன. இந்தியாவும் வளர்ந்து வருகிறது. அப்படி இங்கு ஜனநாயகம் இல்லை என்றால், என்னை போன்ற ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பிரதமராக உட்கார்ந்து கொண்டிருக்க முடியாது.

சீனாவின் அத்துமீறல்கள் அண்டை நாடுகளுக்கு கவலையை அளிக்கிறது. சீனா சர்வதேச சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கும் என நம்புகிறேன். இருந்தாலும், பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்தால் நாம் கண்ணை மூடிக்கொண்டிருக்க நாம் ஒன்றும் 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை.

இவ்வாறு பிரதமர் மோடி பேட்டியளித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...