பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்

 பால் கொள்முதல் விலையை உயர்த்தவேண்டும்' என்று பா.ஜ.க, தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்துக்கு, நாள்தோறும் 1.5 கோடி லிட்டர் பால் தேவை. இதில், 23.5 லட்சம் லிட்டர் பால், ஆவின் மூலம் சப்ளை செய்யப் படுகிறது. மீதமுள்ள பாலை, தனியார் மூலம் சப்ளை செய்கின்றனர். ஆவின் நிறுவனம், கொள்முதல் செய்யும் பசும்பாலுக்கு, லிட்டருக்கு 19 முதல் 23 ரூபாயும், எருமைப் பாலுக்கு லிட்டருக்கு, 28 முதல் 30 ரூபாயும் அளிக்கிறது.

ஆனால், தனியார் கொள் முதல் செய்யும் பசும் பாலுக்கு, லிட்டருக்கு 25 முதல் 30 ரூபாயும், எருமைப்பாலுக்கு லிட்டருக்கு 40 ரூபாயும் அளிக்கின்றனர். இதனால், பால் உற்பத்தியாளர்கள், தனியாரிடம் பாலைவிற்கவே அதிகம் விரும்புகின்றனர்;

அவர்களை நாடி செல்கின்றனர். பால் விற்பனையில் தனியாரின் பங்கு அதிகமாக இருப்பதால், இந்தாண்டில் மட்டும், நான்குமுறை பால்கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளனர். ஆனால், ஆவின்நிறுவனம் அப்படி செய்ய வில்லை. ஆவின் நிறுவனத்தின் போக்கு, தனியாரை ஊக்குவிக்கும் விதத்தில் உள்ளது.

இதனால், அதிகவிலை கொடுத்து, தனியாரிடம் பால்வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு, பொது மக்கள் தள்ளப்பட்டு வருகின்றனர். எனவே, ஆவின்நிறுவனம், பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். இதன் மூலமே, பொது மக்களை பாதுகாப்பதோடு, பால் உற்பத்தியாளர்களையும் தக்கவைக்க முடியம். அவர்கள், இன்று அறிவித்துள்ள பால் உற்பத்தி நிறுத்த போராட்டத்தையும் தடுக்கமுடியும். என்று , தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...