பாஜக மாநில பொதுக் குழுக் கூட்டத்தை பூந்த மல்லியில் 12-ம் தேதி நடத்த திட்டமிட்டிருப்பதாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார் .
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக பாஜக பொதுக் குழு கூட்டம் கடந்த மாதம் 26-ம் தேதி நடப்பதாக இருந்தது. அன்றைய தினம் தேஜக.கூட்டணி எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி தேநீர்விருந்து ஏற்பாடு செய்திருந்ததால் தேசிய நிர்வாகிகள் வர முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், பொதுக் குழு கூட்டத்தை தள்ளி வைத்தோம்.
நவம்பர் முதல்வாரத்தில் பொதுக் குழுக் கூட்டம் நடத்தலாம் என்று கேட்ட போது, ஹரியாணா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் பாஜக முதல்வர்கள் பதவியேற்பு நிகழ்ச்சிகள் நடப்பதாகவும், அதில் தமிழக பொறுப்பாளரான ராஜீவ்பிரதாப் ரூடி பங்கேற்கிறார் என்றும் தலைமை கூறியது. இதையடுத்து நவம்பர் 12-ம் தேதி மாநில பொதுக் குழுக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று அவர் கூறினார்.
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.