ஜூன் 21&ம் தேதி சர்வதேச யோகாதினமாக கொண்டாடப்படும் ஐ.நா

 அமெரிக்காவில் நடைபெற்ற ஐ.நா. சபை கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றும் போது, யோகாவின் பயன்கள் குறித்து விரிவாக விளக்கினார். இதை தொடர்ந்து, வரும் ஆண்டு முதல் ஜூன் 21&ம் தேதி சர்வதேச யோகாதினமாக கொண்டாடப்படும் என்று ஐ.நா. சபை அறிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 5 ஆயிரம் வருடங்களாக மனிதனின் மன அழுத் தங்களை போக்குவதற்கு உடல், மனம் மற்றும் ஆன்மிக பயிற்சியாக யோகா சனம் பயன்பட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு மனிதனின் மன அழுத்தங்கள் அகல்வதுடன், பல்வேறு உடல் உபாதைகளும் நீங்குகின்றன. அத்துடன், அவர்கள் நாள்தோறும் புத்துணர்ச்சியுடன் செயல்பட உதவுகிறது.

இந்தியாவில் பின்பற்றப்படும் இத்தகைய யோகாசன சிறப்புகள்குறித்து கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஐ.நா. சபை கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி விளக்கினார். இதனை அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட 175 நாடுகள் வரவேற்று ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், சர்வதேச அளவில் யோகாசனம் குறித்து விழிப் புணர்வை கொண்டு வருவதற்காக கடந்த 9&ம் தேதி ஐ.நா. பொது சபையின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஐ.நா. சபையில் அங்கம் வகிக்கும் 193 நாடுகளில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட 175 நாடுகளின் தலைவர்கள் ஆதரவுதெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, சர்வதேச அளவில் ஜூன் 21ம் தேதியை யோகாசன தினமாக கொண்டாடுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இத்தகைய சிறப்புமிக்க யோகா சனத்தை உலகளவில் எடுத்துரைத்ததற்காக இந்தியபிரதமர் நரேந்திர மோடியை அனைத்து தலைவர்களும் பாராட்டியதாக ஐ.நா.வின் நிரந்தர இந்திய பிரதிநிதி அசோக் குமார் முகர்ஜி இன்று நியூயார்க்கில் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.