இன்னும் 3 மாதத்தில் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு

 மீனவர்கள் பிரச்சனைக்கு விரைவில் நிரந்தரதீர்வு காணப்படும் என பிஜேபி தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறியதாவது; வருகிற 2016 –ல் நடை பெறும் தமிழக சட்ட மன்ற தேர்தலில் பா.ஜ.க.,முதல்வர் வேட்பாளரை அறிவித்து தேர்தலை சந்திக்கும் என்பதை கட்சிதலைவர் அமித்ஷா தெளிவாக கூறிவிட்டார். மேலும் முதல்வர் வேட்பாளர் பற்றி உரியநேரத்தில் கட்சி அறிவிக்கும்.

அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி அமைப்பது பற்றி கற்பனை செய்துகூட பார்க்கவில்லை. தி.மு.க. மற்றும் அதிமுக.வுக்கு மாற்றாக பா.ஜ.க அணி அமையும்.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க கொள்கைகளுக்கும் இந்து மகாசபா கட்சி கொள்கைக்கும் வேறுபாடு உள்ளது. இந்து மகாசபா இந்துக்கள் மட்டுமே நாட்டில் இருக்கவேண்டும் என்ற கொள்கை உடையவர்கள். ஆனால் எங்களுக்கு அப்படிப்பட்ட கொள்கை கிடையாது.

நாடுமுழுவதும் மக்களால் போற்றப்படுகிற தேசத்தின் அடையாளமாக மகாத்மா காந்தி விளங்குகிறார். அவரை சுட்டுகொன்ற கோட்சேவுக்கு சிலை அமைக்கும் முயற்சி சரியானது அல்ல.

மன மாற்றம் மூலமே நடைபெறும் மதமாற்றத்தை பா.ஜ.க ஏற்றுகொள்ளும். ஆனால் ஆசையை காட்டி கட்டாய மதமாற்றம் செய்வது தண்டிக்கப்பட வேண்டும். இந்துக்களை மற்றமதங்களுக்கு மாற்றுகிறார்கள். ஆனால் இது பற்றி எந்த அரசியல் கட்சிகளும் கருத்து தெரிவிக்க வில்லை.

கச்ச தீவை தானமாக வழங்கியது மறைந்த பிரதமர் இந்திராகாந்தி. சுமார் 40 ஆண்டுக்கு முன்னர் இந்திய மீனவர்கள் இலங்கை கடல் பகுதியிலும், இலங்கை மீனவர்கள் இந்திய கடல் பகுதியிலும் மீன்பிடித்து வந்தனர். அதுபோன்ற நிலையை ஏற்படுத்த மத்திய அரசு முனைப்பாக செயல்பட்டு வருகிறது.

ஒரு சில அம்சங்கள் தவிர்த்து மற்ற வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டது. இன்னும் 3 மாதத்தில் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை அறிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...