பாராளுமன்றத்தில் மக்கள் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற ஆதரவுகேட்கவே மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, ஜெயலலிதாவை சந்தித்தார். இதில் எந்த பூனைக் குட்டியும் வெளியே வரவில்லை என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி ஜெயலலிதாவை சந்தித்தது குறித்து பல சர்ச்சைகளை கிளப்புகிறார்கள். இதற்கு முன்பு மத்தியமந்திரி ரவிசங்கர் பிரசாத்தும், வெங்கையா நாயுடுவும் ஜெயலலிதாவை சந்தித்த போது இதே போல் சர்ச்சை கிளப்பினார்கள். இவர்கள் எல்லாம் ஊழலில் திளைத்த வர்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தவர்கள்தான்.
பாராளுமன்றத்தில் மக்கள் நலனுக்கான வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற ஆதரவு கேட்டுத்தான் ஜெயலலிதாவை அருண் ஜெட்லி சந்தித்தார். பாஜக. நாட்டை வளர்ச்சிபாதையில் அழைத்து செல்ல முனைப்புடன் செயல்படுகிறது.
எனவே இந்த சந்திப்பின் போது எந்த பூனைக் குட்டியும் வெளியே வரவில்லை. யானைக் குட்டியும் வெளியே வரவில்லை. இதற்கு அருண் ஜெட்லி விளக்கம் அளிக்க வேண்டியது இல்லை. மாநில தலைமை விளக்கம் தந்தாள் போதுமானது.
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.