விவசாயம் செய்து பிழைத்து கொள்வேன். உங்களால் முடியுமா?

தமிழக நிதியமைச்சர் தியாகராஜனுக்கு பதிலடிகொடுத்தது தவறில்லை எனக்கூறியுள்ள தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, அடித்தால் திருப்பிஅடிப்பேன். மரியாதை கொடுத்தால், இரட்டிப்பாக அதனைசெய்வேன் எனக்கூறினார்.

நெல்லையில் நிருபர்களை சந்தித்தவர் கூறியதாவது: அண்ணாதுரை முதல்வராக பதவியேற்ற பிறகுதான், விநாயகர் சதுர்த்திக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. அண்ணாதுரை வகுத்தபாதையில் இருந்து திமுக அரசு எந்தளவு விலகி உள்ளது என்பதற்கு முதல்வர் வாழ்த்துசொல்லாதது, ஹிந்து சமய அறநிலையத் துறை அவர்கள் சார்ந்த துறை வாழ்த்து சொல்லியதற்கு கேள்வி எழுப்பியது உதாரணம். விநாயகர் சதுர்த்திக்கு ஹிந்துசமய அறநிலையத்துறை வாழ்த்து சொல்லியது தவறுகிடையாது. ஒரேதவறு. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சொல்லாததுதான். முதல்வரின் செயல், அனைத்து மதத்தையும் சமமாக நடத்துவேன் என்பதற்கு எதிராகஉள்ளது. முதல்வர் வாழ்த்து சொல்லாததன் மூலம், அவர் மத அரசியல் செய்கிறார் என்பது மீண்டும் ஒருமுறை ஊர்ஜிதமாகி உள்ளது.

தமிழகத்தை விட உ.பி.,யின் நிகரவருமானம் உயர்ந்துள்ளது. உத்தர பிரதேசம் சரியில்லை எனக்கூறி ஆட்சி செய்கிறீர்கள். ஆனால், தமிழகத்தைவிட உ.பி.,யின் நிகர வருமானம் உயர்ந்துள்ளது. தமிழகத்தின் நிகர வருமானம் குறைந்துள்ளதற்கும் தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் பதில் சொல்லவேண்டும்.

தமிழகத்தின் அரசியலுக்கு அண்ணாமலை சாபக்கேடு என தியாகராஜன் சொல்வதற்கு என்ன உரிமைஉள்ளது. நீங்கள்தான் சாபக்கேடு. சுதந்திரத்திற்கு முன்னர் கிழக்கிந்திய கம்பெனியோடு கொஞ்சி குழாவவில்லையா?. ஜஸ்டீஸ் கட்சிக்கு தொடர்பில்லையா?. 1941ல் நீங்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கவேண்டாம். வழங்கினால் இங்கிலாந்தில் இருந்து ஆட்சி செய்யுங்கள் எனக்கூறினார்கள். அந்தகட்சியின் வழித்தோன்றலாக வந்து அமர்ந்துவிட்டு என்னைபார்த்து அந்த வார்த்தை பயன்படுத்த என்ன அருகதை உள்ளது. தி.மு.க.,வில் யாருக்கும் அந்தஅருகதை கிடையாது. உங்களுக்கும், கிழக்கிந்திய கம்பெனிக்கும் உள்ள தொடர்பு தமிழக மக்களுக்குதெரியும். வெட்கம், மானம் சூடு இல்லாமல் பழைய சரித்திரத்தை மறைத்துவிட்டு இந்தியாவிற்கு போராடியதாக 2022ல் காட்டுவதற்கு பதிலடிகொடுக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது.

திமுக பழையபாணி அரசியலில் இருந்து வெளியே வரவேண்டும். என்னை மிரட்டி பார்த்தால், இப்படி தான் பதில் இருக்கும். மிரட்டி பார்க்க நாங்கள் வரவில்லை. நான் விவசாயதோட்டத்தில் சென்று விவசாயம் செய்து பிழைத்து கொள்வேன். உங்களால் முடியுமா?

தகாத வார்த்தை பேசுவீர்கள். ஆபாசம் காட்டுவீர்கள். ஐ.டி., விங் வைத்து பேசுவீர்கள் நான் இயேசுநாதர் கிடையாது. ஒருகன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தை காட்ட நான் இயேசு கிடையாது. அடித்தால் திருப் அடிப்பேன். அத்துமீறினால், அதனை இரு மடங்காக செய்வேன். இதனால், எதை இழந்தாலும் கவலைகிடையாது. மரியாதை செய்தால் இரட்டிப்பாக மரியாதை செய்தேன். தியாகராஜனுக்கு பதிலடிகொடுத்தது எந்த தவறும் கிடையாது. நான் தன்மானம் இருக்கும் அரசியல்வாதி.

எதையும் விற்று பிழைத்து, யாரின் கால்பிடித்து பதவிக்கு வரவில்லை. பதவியில் உட்கார ஆசையில்லை. அண்டிபிழைத்து, ஒருவரை ஒட்டிபிழைத்து இருக்கும் அவசியம் அண்ணாமலைக்கு கிடையாது. பா.ஜ., உறுப்பினராக இருப்பதேபெருமை. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – முருகன் சாடல் 'விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங்குடியின பெண் ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முட ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது – L முருகன் பேட்டி ''மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,'' ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...