டெல்லி தேர்தல் முடிவு மோடி அரசின் செயல்பாடு மீதான வாக்கெடுப்பாக கருதமுடியாது

 டெல்லி சட்ட சபை தேர்தல் முடிவுகளை நரேந்திர மோடி அரசின் செயல்பாடு மீதான வாக்கெடுப்பாக கருதமுடியாது என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது,

டெல்லியில் நடை பெறுவது மாநிலதேர்தல். அங்கு பிரதமர் நரேந்திரமோடி போட்டியிடவில்லை. டெல்லி தேர்தலில் முதல்வர் யார் என்பதை மக்கள்தான் முடிவு செய்யவேண்டும். டெல்லியில் பாஜக.,வுக்கும், மற்ற கட்சிகளுக்கும் இடையேயான போட்டி தான் நிலவுகிறது. பிரதமர் நரேந்திர மோடி அரசின் செயல்பாடுகள் குறித்து மக்கள் அளிக்கும் கருத்துகளின் வெளிப்பாடாக டெல்லி சட்ட சபை தேர்தல் முடிவுகளை எடுத்து கொள்ள கூடாது.

மகராஷ்டிரம், ஜார்கண்ட், அரியானா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற சட்ட சபை தேர்தல்களில் மோடி அரசின் செயல் பாட்டை வைத்துத் தான் மக்கள் பாஜக.,வுக்கு வெற்றிவாய்ப்பை அளித்தார்களா? அதுபோல மத்திய அரசின் செயல்பாடு மீதான வாக்கெடுப்பாக டெல்லிதேர்தல் முடிவுகளை கருத முடியாது. மோடியின் கரங்களுக்கு வலுசேர்க்க வேண்டும் என்ற மனோநிலை தான் மக்களிடையே நிலவுகிறது.

டெல்லியில் ஆட்சியமைத்த காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய இரு கட்சிகளும் மாநிலத்தை அழிவு பாதைக்கு கொண்டுசென்றன. அந்த இரு கட்சிகளுக்கும் இடையே நல்லதொடர்பு உள்ளது. எனவேதான் போலி நிறுவனங்கள் மூலம் முறைகேடாக நன்கொடை பெற்றதாக எழுந்த புகாரில் ஆம் ஆத்மி காங்கிரஸ் காப்பாற்ற முயற்சித்து வருகிறது என்று தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...