டெல்லி தேர்தல் முடிவு மோடி அரசின் செயல்பாடு மீதான வாக்கெடுப்பாக கருதமுடியாது

 டெல்லி சட்ட சபை தேர்தல் முடிவுகளை நரேந்திர மோடி அரசின் செயல்பாடு மீதான வாக்கெடுப்பாக கருதமுடியாது என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது,

டெல்லியில் நடை பெறுவது மாநிலதேர்தல். அங்கு பிரதமர் நரேந்திரமோடி போட்டியிடவில்லை. டெல்லி தேர்தலில் முதல்வர் யார் என்பதை மக்கள்தான் முடிவு செய்யவேண்டும். டெல்லியில் பாஜக.,வுக்கும், மற்ற கட்சிகளுக்கும் இடையேயான போட்டி தான் நிலவுகிறது. பிரதமர் நரேந்திர மோடி அரசின் செயல்பாடுகள் குறித்து மக்கள் அளிக்கும் கருத்துகளின் வெளிப்பாடாக டெல்லி சட்ட சபை தேர்தல் முடிவுகளை எடுத்து கொள்ள கூடாது.

மகராஷ்டிரம், ஜார்கண்ட், அரியானா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற சட்ட சபை தேர்தல்களில் மோடி அரசின் செயல் பாட்டை வைத்துத் தான் மக்கள் பாஜக.,வுக்கு வெற்றிவாய்ப்பை அளித்தார்களா? அதுபோல மத்திய அரசின் செயல்பாடு மீதான வாக்கெடுப்பாக டெல்லிதேர்தல் முடிவுகளை கருத முடியாது. மோடியின் கரங்களுக்கு வலுசேர்க்க வேண்டும் என்ற மனோநிலை தான் மக்களிடையே நிலவுகிறது.

டெல்லியில் ஆட்சியமைத்த காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய இரு கட்சிகளும் மாநிலத்தை அழிவு பாதைக்கு கொண்டுசென்றன. அந்த இரு கட்சிகளுக்கும் இடையே நல்லதொடர்பு உள்ளது. எனவேதான் போலி நிறுவனங்கள் மூலம் முறைகேடாக நன்கொடை பெற்றதாக எழுந்த புகாரில் ஆம் ஆத்மி காங்கிரஸ் காப்பாற்ற முயற்சித்து வருகிறது என்று தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...