பாராளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2015-16ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் பீகாருக்கு பலனளிக்கும் விசயங்கள் அறிவிக்கப் பட்டுள்ளதை தொடர்ந்து பிரதமரை விமர்சிப்பதை நிதீஷ் குமார் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய மந்திரி பஸ்வான் கேட்டுக் கொண்டுள்ளார்.
ராம் விலாஸ் பஸ்வான் செய்தியாளர்களிடம் கூறுகையில், எய்ம்ஸ் போன்ற அமைப்பை உருவாக்குதல் என்ற அறிவிப்பு, ஆந்திர பிரதேசம் வரிசையில் சிறப்புநிதி ஒதுக்கீடு மற்றும் பிறசலுகைகள் மத்திய பட்ஜெட்டில் பீகாருக்காக அறிவிக்கப்பட்டு உள்ளது அதன் எதிர் காலத்திற்கு சிறந்தது.
இதனை அனைவரும் பாராட்ட வேண்டும். மாநிலத்தின் முன்னேற்றம் மற்றும் நலன்குறித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் தே.ஜ.,கூட்டணி அரசுகளுக்கு இடையேயான அணுகு முறையில் உள்ள வித்தியாசத்தை பீகார் முதல் மந்திரி கவனத்தில் கொள்ளவேண்டும்.
அந்த மாநிலத்தின் சிறப்புநிதி ஒதுக்கீடுக்கான நியாயமான தேவையைகூட முந்தைய அரசு தவிர்த்தது. பீகார் மக்களின் நலன்களுக்காக செயல் படும் வகையில் மோடி அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு மற்றும் பிற சலுகைகளை நேரடியாக அறிவித்துள்ளது. மோடி மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசை தொடர்ச்சியாக நிதீஷ்குமார் தாக்கி பேசிவரும் நிலையில் மோடி சலுகைகளை அறிவித்துள்ளார்.
மோடி மீது மோசமான அணுகு முறையை பலவருடங்களாக கொண்டிருக்கும் நிதீஷ் குமார் , கடந்த ஜூன் 2010ம் ஆண்டில் பாட்னா நகரில் அப்பொழுது குஜராத் முதல் மந்திரியாக இருந்த நரேந்திரமோடி உட்பட பாரதீய ஜனதா தலைவர்களின் கூட்டத்தில் இரவு விருந்தில் கலந்துகொள்ளாமல் ரத்து செய்ததை நினைவு கூர்ந்தார்.
மத்தியில் மோடி தலை மையிலான அரசு பீகாரின் முன்னேற்றத்திற்கான தனது நோக்கத்தை செயல்வடிவில் வெளிப்படுத்தி யுள்ளதால், பாஜக மற்றும் பிரதமருக்கு எதிரான தொடர்ச்சியான மோசமான விமர்சனத்திற்காக குமார் மன்னிப்புகேட்க வேண்டும் என பஸ்வான் கேட்டு கொண்டுள்ளார்.
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.