ரூ.2,000 கோடி மதிப்பிலான எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அரசு நிலம் தயார்

 தமிழகத்தில் ரூ.2,000 கோடியில் அகில இந்தியமருத்துவ ஆராய்ச்சி மையத்தை (எய்ம்ஸ்) மத்திய அரசு அமைப்பதற்கு அரசுநிலம் தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

"எய்ம்ஸ்' மையத்தை அமைப்பதற்கான பணிகளை மத்திய அரசு உடனடியாக தொடங்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி சனிக்கிழமை சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கையில் தமிழகம், பஞ்சாப், ஹிமாசலப் பிரதேசம், அஸ்ஸாம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய 5 மாநிலங்களில் தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ மையம் (எய்ம்ஸ்) போன்று மருத்துவ மையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:

5 இடங்களில் நிலம்தயார்: "எய்ம்ஸ்' மையத்தை மத்திய அரசு அமைப்பதற்காக செங்கல்பட்டு, புதுக் கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி, ஈரோடு மாவட்டம், பெருந்துறை, மதுரை அருகே தோப்பூர் ஆகிய 5 இடங்களில் அரசுநிலம் கையகப்படுத்தப்பட்டு தயாராக உள்ளதாகவும் இவற்றில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தை மத்திய அரசு தேர்வுசெய்து "எய்ம்ஸ்' மையத்தை அமைக்கலாம்.

சாலை, ரயில் வசதி, தண்ணீர், மின்சாரவசதி ஆகிய உள்கட்டமைப்பு வசதிகளின் அடிப்படையில் இந்த 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது .

உயர்தர மருத்துவ கல்வி: தமிழகத்தில் "எய்ம்ஸ்' மையம் விரைவாக அமையும் நிலையில், மாணவர்களுக்கு தரமான மருத்துவ கல்வி, பொதுமக்களுக்கு தரமான மருத்துவசேவை, மருத்துவ நிபுணர்களுக்கு ஆராய்ச்சி வசதி ஆகியவை கிடைக்கும். எனவே, தமிழகத்தில் "எய்ம்ஸ்' மையத்தை அமைக்கும் மத்திய அரசின் முயற்சிகள் அனைத்துக்கும் விரைவான ஒத்துழைப்பு அளிக்கத்தயார் என சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...