இந்தியா – இலங்கை இடையே நான்கு ஒப்பந்தங்கள்

 இந்தியா – இலங்கை இடையே பல்வேறு அம்சங்கள் குறித்து நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. கொழும்பில் இது தொடர்பான விவரங்களை பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் சிறீ சேனா ஆகியோர் கூட்டாக வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்து தெரிவித்தனர்.

இதில் நரேந்திர மோடி கூறியதாவது:

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே விசா, சுங்கம், இளைஞர்கள் மேம்பாடு, இலங்கையில் இந்திய கவிஞர் ரவீந்திர நாத் தாகூர் சிலையை நிறுவுவது ஆகியவை தொடர்பாக 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

சுங்க வரி ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக நடை முறைகள் எளிமைப் படுத்தப்படும்.

இலங்கையின் திரிகோண மலையை பெட்ரோலிய வர்த்தக மையமாக மேம்படுத்த அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. மேலும், இலங்கையின் ரயில்வே துறை மேம்பாட்டுக்கு ரூ.1,820 கோடியை இந்தியா வழங்கும்.

இலங்கை நாணய மதிப்பு, ஸ்திரத்தன்மையுடன் விளங்குவதற்காக இந்திய ரிசர்வ்வங்கி – இலங்கை சென்ட்ரல் வங்கி இடையே ரூ.9,000 கோடி மதிப்பில் செலாவணி பரி மாற்ற ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்திய-இலங்கை மீனவர் பிரச்னை இருநாடுகளுக்கு இடையேயான உறவில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது, இருதரப்பு மீனவர்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்னையாகும். இதனை மனிதாபிமான ரீதியில் அணுக வேண்டியுள்ளது.

எனவே, இருநாடுகளை சேர்ந்த மீனவ பிரதிநிதிகளும் விரைவில் சந்தித்து இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வைக் காணவேண்டும். இதற்கு தேவையான உதவிகளை இந்திய அரசு அளிக்கும் என்றார் மோடி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...