வீதிகள் தோறும், வீடுகள் தோறும் சென்று இந்துக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எடுத்துச் சொல்வோம்

 சென்னை ஈக்காட்டு தாங்கலில் உள்ள தனியார் டி.வி. நிறுவனம் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக இந்து முன்னணியினர் மீது பொய் வழக்கு போடப்பட்டு இருப்பதை கண்டித்து சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் இந்து முன்னணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

போராட்டத்தில் இந்துமுன்னணி மாநில அமைப்பாளர் ராம கோபாலன் கலந்துகொண்டார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

இந்துக்களை வேண்டும் என்றே கொச்சைப் படுத்தி பேசியும், எழுதியும் வருகிறார்கள்.

ஆண்டாள், திருநாவுக்கரசர், காரைக்கால் அம்மையார் இவர்களை பற்றியெல்லாம் எவ்வளவு இழிவுப்படுத்த முடியுமோ அவ்வளவு இழிவுபடுத்தி எழுதினார்கள். இப்போது இந்துபெண்களுக்கு தாலி தேவையா? என்று விவாதம் வைக்கிறார்கள். தீபாவளி தேவைதானா என்கிறார்கள்.

இந்துக்களை எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ அவ்வளவு அவமானப் படுத்துகிறார்கள். இதைப்பற்றி ஒரு முற்போக்கு வாதிகள்கூட பேசவில்லையே ஏன்? ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் குறிவைத்து உள் நோக்கத்தோடு தாக்குவது ஏன்? இதுதான் கருத்துசுதந்திரமா?

ஈக்காட்டு தாங்கலில் உள்ள தனியார் டி.வி. நிறுவனம் நிகழ்ச்சியை கண்டித்து நாங்கள் போராட சென்ற போது 1 கிலோ மீட்டர் முன்பே போலீசார் தடுத்து நிறுத்தி சுட்டனர்.

ஆனால் எங்கள் மீது கேமராமேனை அடித்து கேமிராவை உடைத்ததாக பொய் வழக்கு போட்டு உள்ளனர். அதே நிறுவனத்தில் யாரோ டிபன் பாக்ஸ் குண்டு வீசியதை அறிந்ததும் கண்டித்தோம். கருத்தை கருத்தால் மோதி தீர்ப்பவர்கள் நாங்கள்.

தொடர்ந்து இந்துக்களை கேவலப்படுத்தி வருவதால் பொறுமை இழந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். ஏதோ ஒரு நாட்டில் நடந்த சம்பவத்திற்காக சென்னையில் போராட்டம் நடத்தி இயல்பு வாழ்க்கையையே ஸ்தம்பிக்க செய்தார்கள். ஆனால் அதையெல்லாம் எந்த முற்போக்கு வாதிகளும் கண்டு கொள்ளவில்லை. இந்துக்களை இழிவு படுத்துவதை தட்டிக்கேட்டால் வன்முறையில் ஈடுபடுவதாக கூறுகிறார்கள்.

நாங்கள் ஏமாளிகள் அல்ல. வீதிகள் தோறும், வீடுகள் தோறும் சென்று இந்துக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும், அவமானங்களையும் எடுத்துச் சொல்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...