மோடியிடம் 900 வருட பழைமையான சிற்பத்தை திருப்பி தந்த கனடா பிரதமர்

 கனடா நாட்டுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியிடம் அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், கஜு ராஹோ கோவிலின் 900 வருட பழைமையான சிற்பம் ஒன்றை திருப்பிதந்தார்.

கடந்த 1970ம் ஆண்டு யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் படி, கிளிபெண் என்ற பெயர் கொண்ட அந்த சிற்பத்தை மோடியிடம் ஹார்பர் நேற்று ஒப்படைத்தார். ஹார்பர் உடனான பேச்சு வார்த்தைக்கு பின்னர் கனடா நாட்டு பாராளுமன்ற நூலகத்திற்கு சென்ற மோடியிடம், ஹார்பர் இதனை வழங்கினார்.

இதுகுறித்து வெளியுறவு விவகார அமைச்சக செய்திதொடர்பாளர் சையத் அக்பருதீன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவின் பாரம்பரியமிக்க கிளிபெண் என்ற சிற்பத்தை கனடா திருப்பி தந்துள்ளது. கஜு ராஹோவில் இருந்த கற் சிற்பத்தினை பிரதமர் மோடி திரும்ப பெற்றுள்ளார் என கூறியுள்ளார்.

அந்த சிற்பத்தி¢ல், நடன மாடும் ஒருவரின் முதுகில் கிளி ஒன்று உடன் இருப்பதுபோன்று வடிவமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 2011ம் ஆண்டு இந்த விலைமதிப்புமிக்க கலைபொருள் கனடா நாட்டில் ஒருவரிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லா நிலையில் அது பறிமுதல் செய்யப்பட்டது என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அதனை அடுத்து கனடா நாட்டு அதிகாரிகள் இந்திய அதிகாரிகளை தொடர்புகொண்டு சிற்பத்தை திருப்பி தருவது குறித்து விவாதிக்கப்பட்டது.

One response to “மோடியிடம் 900 வருட பழைமையான சிற்பத்தை திருப்பி தந்த கனடா பிரதமர்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...