மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக சீனா சென்றடைந்தார்

 பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக சீனா சென்றடைந்தார். அந்நாட்டின் ஜியாங்க் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு சிவப்புக்கம்பள வரவேற்பளிக்கப்பட்டது. நாட்டின் பிரதமராக பதவியேற்ற பின்னர் முதல்முறையாக சீனாவுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார்.

டெல்லியில் இருந்து நேற்று நள்ளிரவு புறப்பட்ட பிரதமர் இன்று அதிகாலை சீனாவின் ஜியாங்க் விமான நிலையம் சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிவப்புகம்பள வரவேற்புடனும் அந்நாட்டு பாரம்பரிய நடன நிகழ்ச்சியுடனும் வரவேற்பு அளிக்கப்பட்டது. விமானநிலையத்தில் சிறுமி கொடுத்த பூங்கொத்தை மகிழ்ச்சியுடன் மோடி வாங்கினார். அவரை நடன கலைஞர்கள் ஆடிப்பாடி வரவேற்றனர்.

6-ம் நூற்றாண்டில் புத்தமதத்தை பரப்பிய ஜியான் ஜாங் நினைவைப் போற்றும் வகையில் ஜியான் நகரில் உள்ள வைல்ட் கூஸ் பகோடா என்ற பாரம்பரிய வழிபாட்டு தலம் உள்ளிட்ட இடங்களை இந்திய பிரதமருக்கு சீன அதிபர் சுற்றிக்காட்டினார். பின்னர் அங்கிருந்து, தலைநகர் பெய்ஜிங் செல்லும் பிரதமர் மோடியை சீன பிரதமர் லி கெகியாங் வரவேற்று இரு நாடுகளும் பயன்பெறும் வகையில் பல ஒப்பந்தங்களை மேற்கொள்கிறார்.

சீனாவின் தொழில்நகரமான ஷாங்காய் செல்லும் மோடி அங்கு சீன தொழிலதிபர்களை சந்தித்து, இந்தியாவில் ஏராளமாக முதலீடு செய்யுமாறு, வேண்டுகோள் விடுக்க உள்ளார். அதன் பின் மங்கோலியா செல்லும் பிரதமர் தென்கொரியாவுக்கும் செல்கிறார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...