இந்திய நாட்டின் பெருமையை உலகம் அறியசெய்து வருகிறார் மோடி

 இந்திய நாட்டின் பெருமையை பல விதங்களில் உலகம் அறியசெய்து வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.

வேலூர் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் தொரப் பாடியில் மத்திய பாஜக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் கலந்துகொண்டு இல.கணேசன் பேசியது:

சர்வதேச தினமாகக் கொண்டாடப்பட்ட யோகாகலை அறிவியல்பூர்வமானது, ஒருகுறிப்பிட்ட கட்சிக்கோ, மதத்துக்கோ உரியதல்ல. இந்திய நாட்டின் பாரம்பரியத்தை தாங்கி நிற்பது என்ற நிலையை எதிர்க் கட்சிகளாக இருப்பினும் சில தலைவர்கள் மனம்திறந்து பாராட்டியுள்ளதை பாஜக வரவேற்கிறது. உலகளவில் நம் நாட்டுக்கு பெருமைசேர்த்த இந்த யோகா வரலாற்றில் முக்கிய அம்சமாக பதிந்துள்ளது.

ஆயுள் காப்பீடு, விபத்துக் காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் ஏழைகளுக்கு பிரதமர் மோடி நம்பிக்கை யூட்டியுள்ளார். இதன் மூலம் இது சாமானி யருக்கான அரசு என்பதை மக்கள் உணர்ந்துள்ளார்கள். பசி, பட்டினியை தனது இளமை பருவத்தில் சந்தித்தவர் மோடி.

அதனால் ஏழைமக்களின் நிலை அவருக்கு நன்குதெரியும். அதனால்தான் ஏழை, எளியவர்கள் என்றைக்கும் ஏழைகளாக இருக்கக்கூடாது என்பதற்காக சில திட்டங்களை அவர் செயல்படுத்த தொடங்கியுள்ளார்.

50 ஆண்டுகளாக ஏழ்மையை ஒழிப்போம் என பெயரளவில் சொல்லி கொண்டிருந்தவர்கள் இந்தநாட்டில் இருக்கிறார்கள். ஆனால் அந்த கோஷத்தை எழுப்பாமல் இந்த நாட்டின் ஏழ்மையை ஒழிப்பதற்கான பணிகளை அவர் செய்துவருகிறார்.

அவர் எந்த நாட்டுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டாலும் அந்நாட்டின் மூலம் இந்தியாவின் தேவைகளை கௌரவமாக நிறைவேற்றி வருகிறார். அவரது சுற்றுப் பயணங்கள் காரணமாக இன்றைக்கு அன்னிய நாட்டு முதலீடு 112 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்திய நாட்டின் பெருமையை பல விதங்களில் உலகம் அறியச் செய்துவரும் நரேந்திர மோடி கடந்த ஓராண்டாக லஞ்ச, லாவண்யம் இல்லா அரசை மக்களுக்கு தந்துள்ளார்.

இன்றைக்கு தமிழகத்தில் ஊழலற்ற நிர்வாகத்தை பாஜக தலைமையிலான ஆட்சியால் மட்டுமே தரமுடியும். அதற்கு மக்கள் உறுதுணை புரிய வேண்டும் என்றார் இல.கணேசன்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...