நகரங்களில் காடுகளை வளர்க்கும் ‘urban forest’ திட்டம் விரைவில் வருகிறது

 நகரங்களில் காடுகளை வளர்க்கும் 'urban forest' எனும் திட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு:-

முனிசிபல் கார்ப்பரேஷன்களுக்கு சொந்தமான 200க்கும் மேற்பட்ட நகரங்கள் நாடுமுழுவதும் உள்ளன. அவைகளில் வனத் துறைக்கு ஏற்ற இடங்களாக பல இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், அதுமாதிரியான இடங்களில் மரங்களின் அடர்த்தி மிகக் குறைவாக உள்ளன. சில இடங்களில் மரங்களே காணப்படுவது இல்லை. எனவே நாங்கள் முனிசிபல் கார்ப்பரே ஷன்களின் உதவியோடும், மாநில அரசுகளின் உதவியோடும் அந்த இடங்களில் மரங்களை நடுவதற்கு முடிவுசெய்துள்ளோம்.

இன்றைக்கு நகரங்களில் நிறைய தோட்டங்கள் இருக்கின்றன. ஆனால், காடுகள் இல்லை. மும்பையிலாவது சஞ்சய்காந்தி தேசிய பூங்கா உள்ளது. ஆனால், பலநகரங்களில் இதுவும் கிடையாது. மாங்குரோவ் காடுகள் கடலோரபரப்பின் இயற்கையான பகுதி. அதனால் தான், நகர மேம்பாட்டிற்கான பணிகளை மேற்கொள்ளும் போது மாநில அரசுகள் ஒருமுறைக்கு இருமுறை அவைகளின் பாதிப்புகுறித்து அறிக்கை கேட்கின்றன. ஏற்கனவே, 500 ஹெக்டேர் அளவுக்கு மாங்குரோவ் பூங்காக்களை உருவாக்க மராட்டிய முதல்வரை கேட்டு கொண்டுள்ளேன்.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளிகளில் மாணவர்கள் மரக் கன்றுகளை நடுவதை ஊக்கப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட மத்திய அரசு தயாராக உள்ளது. ஒருபள்ளியில் 5,6,7 என 3 வகுப்புகளிலும் 500 மாணவர்கள் படிக்கிறார்கள் என வைத்து கொள்வோம். ஆளுக்கு ஒருமரக்கன்றை நட்டாலும்கூட 500 மரக்கன்றுகள் நடப்பட்டுவிடும். இந்த மரக் கன்றுகளுக்கு விதைகளை நட்டது முதல் ஒரு ஆண்டுவரை பராமரிப்பது அந்த மாணவர்களின் கடமையாகும். இதன்மூலம் பள்ளி மாணவர்களுக்கு இயற்கையை பற்றிய கல்வியை வழங்கமுடியும் இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...