பயங்கரவாதத்தை சமாளிப்பது குறித்து இந்தியாவிடம் கற்க ஆர்வமாக உள்ளோம்

 பயங்கரவாதத்தை சமாளிப்பது குறித்து இந்தியாவிடம் இருந்து கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கிறோம் என்று எகிப்து அதிபர் அப்தெல் ஃபட்டா எல்-சிசி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்புத்தூதராக மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி எகிப்து சென்று அந்நாட்டு அதிபர் அப்தெல் ஃபட்டா எல்-சிசியை சந்தித்துப்பேசினார்.

தில்லியில், வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள மூன்றாவது இந்திய-ஆப்பிரிக்கமன்ற உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள வருமாறு சிசிக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

இருதலைவர்களும் பயங்கரவாத எதிர்ப்பு, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பரஸ்பர நன்மை சார்ந்த விவகாரங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பை தொடர்ந்து எகிப்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப் பட்டிருப்பதாவது: பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு எகிப்து ஆர்வத்துடன் உள்ளதாக கூறியதோடு, அரசியல் மற்றும் பொருளதார முன்னேற்றத்தில் இந்தியாவின் நடவடிக்கைகளை பாராட்டினார்.

பயங்கரவாதத்தை சமாளிப்பதில் இந்தியாவின் அனுபவத்தில் கற்றுக் கொள்ள எகிப்து ஆர்வத்துடன் இருப்பதாகவும் அதிபர் சிசி தெரிவித்தார். இதை நக்வி வரவேற்றார்.

அதிபரிடம் நக்வி கூறுகையில், எகிப்தில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு கடும்கண்டனம் தெரிவித்தார். பயங்கர வாதத்தைச் சமாளிப்பதில் எகிப்தின் முயற்சிகளுக்கு துணைநிற்போம் என்று அவர் உறுதியளித்தார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிபர் சிசியை நக்வி சந்தித்த போது எகிப்துக்கான இந்திய தூதர் சஞ்சய் பட்டாச்சார்யா உடன் இருந்தார். இந்த சந்திப்புகுறித்து அதிபரின் செய்தித்தொடர்பாளர் அலா யூசெஃப், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பல்லாண்டு காலமாக, இந்தியா-எகிப்து உள்ளிட்ட இரண்டு நாடுகளும் சிறப்பான முறையில் கடைபிடித்துவரும் பரஸ்பர உறவுகுறித்து அதிபர் பெருமிதம் தெரிவித்தார்.

அரசியல், பொருளாதார துறைகளில் இந்தியா எட்டியுள்ள வளர்ச்சி தான் அந்நாட்டை சர்வதேசளவில் உருவெடுத்துவரும் வல்லரசு நாடுகளில் ஒன்றாக அதை மாற்றியுள்ளது என்றார் அலா யூசெஃப்.
முக்தார் அப்பாஸ்நக்வி, செய்தியாளர்களிடம் கூறுகையில், ""இருதரப்பு உறவை மேம்படுத்தும் நோக்கில், அடுத்ததாக இந்தியாவில் இருந்து மூத்த அரசு அதிகாரிகள் தொடர்ச்சியாக எகிப்தில் பயணம்மேற்கொள்ள உள்ளனர்'' என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...