வேறுபிரச்சினைகள் இல்லாததால் பாராளுமன்றத்தை காங்கிரஸ் முடக்குவதாக மத்திய சட்டமந்திரி சதானந்த கவுடா குற்றம் சாட்டி உள்ளார்.
சதனாந்த கவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது அவர் கூறியதாவது:-
லலித்மோடி விவகாரத்தில் அவருக்கு மனிதாபிமான அடிப்படையில் வெளியுறவு மந்திரி சுஷ்மாசுவராஜ் சில உதவிகளை செய்துள்ளார். அது பெரியகுற்றம் அல்ல. ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரா ராஜேயும் எந்தகுற்றமும் செய்யவில்லை.
இதேபோல் வியாபம் பிரச்சினையில் மத்தியபிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகானும் எந்த தவறும் செய்யவில்லை. அதனால் தான் தானாக முன்வந்து சி.பி.ஐ. விசாரணைக்கு தயார் என அவரே அறிவித்தார். இவர்கள் தவறு செய்ய வில்லை என்பதை பாஜ தெளிவுபடுத்தி இருக்கிறது.
ஆனால் பா.,ஜனதா அரசு மீது குற்றம்சொல்வதற்கு வேறு எதுவும் கிடைக்காததால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் இந்த பிரச்சினைகளை பெரிதாக்குகின்றன. காங்கிரஸ்க்கு வேறுபிரச்சினைகள் இல்லாததால் பாராளுமன்றத்தை முடக்குகிறது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.என்று சதானந்த கவுடா கூறினார்.
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.