இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி தபால் தலைகளை நிறுத்துவது என்ற முடிவு சரியே

 மறைந்த பிரதமர் இந்திராகாந்தி, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆகியோரது தபால் தலைகளை நிறுத்துவது என்று எடுத்தமுடிவு சரியானது தான் என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து தில்லியில் மத்திய அமைச்சர் ரவிசங்கர்பிரசாத் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

நமது நாட்டின் முக்கிய தலைவர்கள் அனைவரையும் கௌரவிக்கும் வகையில் தபால்தலைகள் இருக்க வேண்டும். ஒருகுடும்ப உறுப்பினர்களை மட்டும் கௌரவிக்கும் வகையில் இருக்கக்கூடாது. தபால்தலைகள் தொடர்பான அறிவுரைக்குழு அளித்த பரிந்துரைப்படி, ஷியாமா பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்யாய, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சர்தார் வல்லபபாய் படேல், சிவாஜி, மௌலானா ஆசாத், பகத்சிங், ஜெய பிரகாஷ் நாராயண், ராம் மனோகர் லோகியா, விவேகானந்தர், மகா ராணா பிரதாப் ஆகியோரின் தபால் தலைகளை வெளியிட முடிவு செய்யபட்டுள்ளது.

தபால் தலைகள் வெளியிடுவது தொடர்பான வரிசையில், ஒருகுடும்பத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இது தவிர, மற்றவர்களின் பெயர்களும் அந்த வரிசையில் உள்ளன. மகாத்மா காந்தி, மௌலானா ஆசாத், டாக்டர் அம்பேத்கர், டாக்டர் பாபா ஆகியோரின் பெயர்களும் உள்ளன. ஆனால், அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வில்லை.

ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள வரிசையில், நாட்டின் சுதந்திரத்துக்கு பாடுபட்ட ஜவாஹர்லால் நேரு உள்பட அனைத்து முக்கிய தலைவர்களும் இருக்கின்றனர். இந்த விவகாரத்தில் நாங்கள் மிகவும் பரந்த மனதுடன் உள்ளோம். வேறு பட்ட சித்தாந்தம், அணுகு முறைகளைக் கொண்டவர்களுக்கும் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பதை நாங்கள் புரிந்துவைத்துள்ளோம். அவர்கள் அனைவரும், நவீன இந்தியாவை உருவாக்குவதற்கு முக்கிய பங்காற்றியுள்ளனர் என்றார் ரவிசங்கர் பிரசாத்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...