இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி தபால் தலைகளை நிறுத்துவது என்ற முடிவு சரியே

 மறைந்த பிரதமர் இந்திராகாந்தி, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆகியோரது தபால் தலைகளை நிறுத்துவது என்று எடுத்தமுடிவு சரியானது தான் என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து தில்லியில் மத்திய அமைச்சர் ரவிசங்கர்பிரசாத் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

நமது நாட்டின் முக்கிய தலைவர்கள் அனைவரையும் கௌரவிக்கும் வகையில் தபால்தலைகள் இருக்க வேண்டும். ஒருகுடும்ப உறுப்பினர்களை மட்டும் கௌரவிக்கும் வகையில் இருக்கக்கூடாது. தபால்தலைகள் தொடர்பான அறிவுரைக்குழு அளித்த பரிந்துரைப்படி, ஷியாமா பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்யாய, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சர்தார் வல்லபபாய் படேல், சிவாஜி, மௌலானா ஆசாத், பகத்சிங், ஜெய பிரகாஷ் நாராயண், ராம் மனோகர் லோகியா, விவேகானந்தர், மகா ராணா பிரதாப் ஆகியோரின் தபால் தலைகளை வெளியிட முடிவு செய்யபட்டுள்ளது.

தபால் தலைகள் வெளியிடுவது தொடர்பான வரிசையில், ஒருகுடும்பத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இது தவிர, மற்றவர்களின் பெயர்களும் அந்த வரிசையில் உள்ளன. மகாத்மா காந்தி, மௌலானா ஆசாத், டாக்டர் அம்பேத்கர், டாக்டர் பாபா ஆகியோரின் பெயர்களும் உள்ளன. ஆனால், அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வில்லை.

ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள வரிசையில், நாட்டின் சுதந்திரத்துக்கு பாடுபட்ட ஜவாஹர்லால் நேரு உள்பட அனைத்து முக்கிய தலைவர்களும் இருக்கின்றனர். இந்த விவகாரத்தில் நாங்கள் மிகவும் பரந்த மனதுடன் உள்ளோம். வேறு பட்ட சித்தாந்தம், அணுகு முறைகளைக் கொண்டவர்களுக்கும் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பதை நாங்கள் புரிந்துவைத்துள்ளோம். அவர்கள் அனைவரும், நவீன இந்தியாவை உருவாக்குவதற்கு முக்கிய பங்காற்றியுள்ளனர் என்றார் ரவிசங்கர் பிரசாத்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...