நவீன உள்கட்டமைப்பு வசதிக ளுடனும், குறைந்த செலவில் சுற்றுலாசெல்ல ஏதுவான நாடாகவும் இந்தியாவை மாற்ற வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி வலியுறுத்தினார்.
நாட்டில் ஆண்டுக்கு 70 லட்சமாக உள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை 7 கோடியாக உயர்த்தவேண்டும் எனவும் அவர் கூறினார்.
ஜன சங்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தீன தயாள் உபாத்யாயவின் நினைவாக, தில்லியில் ரூ.125 கோடியில் சுற்றுலா இல்லம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தவிழாவில் கலந்து கொண்டு அருண்ஜேட்லி பேசியதாவது:
இந்தியாவுக்கு ஆண்டு தோறும் 7 கோடி சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் மகேஷ்சர்மாவை கேட்டுக்கொள்கிறேன்.
எந்தெந்த நாடுகளில் இருந்து மிக அதிகமான சுற்றுலாப்பயணிகள் இந்தியாவுக்கு வருகிறார்களோ, அந்த நாடுகளில் சுற்றுலாமேம்பாட்டு அலுவலகங்களைத் திறக்கவேண்டும்.
சுற்றுலாத்துறை சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்தும் நோக்கில் விமான நிலையங்களை மத்திய அரசு நவீன மயமாக்கி வருகிறது. மேலும், ரயில்வே, நெடுஞ்சாலை போக்குவரத்து வசதிகளும் நவீனமாக மாற்றப்படுகின்றன. இந்தியாவுக்கு மிக, மிக அதிகமான விமானங்கள் வந்தால் தான் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வரமுடியும். எனவே, விமான சேவையை 5 முதல் 10 மடங்குவரை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதேபோல், கப்பல் போக்கு வரத்தையும் விரிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், குறைந்தசெலவில் கிடைக்க கூடிய தங்கும் விடுதிகளுக்கான தேவை அதிகரித்திருக்கிறது.
பிரதமர் நரேந்திரமோடி மேற்கொண்டு வரும் வெளிநாட்டு பயணங்களின் பலனாக, சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் தங்களதுதொழிலை விரிவுபடுத்த முன் வந்துள்ளன என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.