அண்ணா ஹஸôரேவுக்கு எதிராக அவதூறுபிரசாரம் செய்யப்படலாம்; நரேந்திர மோடி

தம்மையும் குஜராத்தையும் பாராட்டியதற்காக காந்தியவாதியான அண்ணா ஹஸôரேவுக்கு எதிராக அவதூறுபிரசாரம் செய்யப்படலாம் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார் .

லோக்பால் மசோதாவை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்ட அண்ணா ஹஸôரே, குஜராத் மாநில முதல்வர்

நரேந்திர மோடி மற்றும் பிகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் ஆகியோர் வளர்ச்சிப்பணிகளை சிறப்பாக செய்துவருவதாக பாராட்டி இருந்தார் .

இதை தொடர்ந்து ஹஸôரேவுக்கு மோடி திறந்தமடல் ஒன்றை எழுதியிருக்கிறார். அதன்-விவரம்: எனது மாநிலத்தையும், என்னையும் நீங்கள் பாராட்டியதை கேள்விப்பட்டேன். இதற்காக நானும் எனதுமாநிலமும் உங்களுக்கு நன்றிசொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். எங்களுக்கான ஆசீர்வாதமாக இதை எடுத்து கொள்கிறேன்.

அதே நேரத்தில் குஜராத்மீது வெறுப்பு கொண்டிருக்கும் சிலரால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் அவதூறு-பிரசாரத்துக்கு நீங்கள் இலக்காக கூடும் என்கிற அச்சமும் எனக்கு உருவாகியுள்ளது .

உங்களது தியாகத்தையும், அன்பையும், சத்தியத்தையும் களங்கப்படுத்த அவர்கள் முயற்சிப்பார்கள். என்னையும் எனது மாநிலத்தையும் பற்றி நீங்கள் பேசியதால் கிடைத்திருக்கும் வாய்ப்பை உங்களை அவமானப்படுத்த பயன்படுத்தி கொள்வார்கள்.

இதுவரைக்கும் யார் யாரெல்லாம் என்னையும் குஜராத்தையும் பாராட்டி பேசினார்களோ அவர்கள்-அனைவருமே அவதூறு பிரசாரத்துக்கு இலக்காகி இருக்கிறார்கள். இதற்கு பல உதாரணங்களை சொல்லலாம்.

குஜராத்தினுடைய வளர்ச்சியை சிலாகித்து பேசியதற்காக கேரள-மார்க்சிஸ்ட் கட்சியைச்சேர்ந்த மூத்த நாடாளுமன்றவாதி அப்துல்லா குட்டி, கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார்.

குஜராத் மேம்பாட்டுப்பணிகள் தொடர்பான ஒருவிடியோவில் பணியாற்றியதற்காக பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மீது அவதூறு பிரசாரம் செய்ய பட்டது. இந்த காரணத்துக்காக தேவ்பாண்ட் இஸ்லாமிய பள்ளியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட குஜராத்தைச் சேர்ந்த மெüலானா குலாம் வாஸ்தன்வி கடும்கண்டனத்துக்கு ஆளானார்.

அண்மையில் குஜராத்தை ஆதரித்து-பேசியதற்காக இந்திய ராணுவ மேஜர் ஜெனரல் ஐஎஸ்.சின்காவை குஜராத்தை-வெறுக்கும் குழுக்கள் கடுமையாக விமர்சித்தன.

குஜராத்தின் மீது வெறுப்பு கொண்டிருபோருக்கும் இங்குநடக்கும் வளர்ச்சிப்பணிகள் பிடிக்கவில்லை. குஜராத் பெயர் எங்கெல்லாம் குறிப்பிடப்படுகிறதோ அங்கெல்லாம் இவர்கள்-உடனடியாக வந்து அவதூறு பரப்ப தொடங்கிவிடுகின்றனர் என்று மோடி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...