140 கோடி இந்தியர்களுக்கும் பெருமை – சுனிதா வில்லியம்ஸ் க்கு பிரதமர் மோடி கடிதம்

‘உங்கள் சாதனைகளால் 140 கோடி இந்தியர்களும் பெருமை அடைகின்றனர்,’ என்று விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்க்கு அனுப்பிய கடிதத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், அவர் சென்ற விண்கலன் பழுதாகி போனதால் மாதக்கணக்கில் அங்கேயே தங்கும் நிலை ஏற்பட்டது.

தற்போது எலான் மாஸ்க் நிறுவனத்தின் விண்கலன் மூலம் அவர் பூமி திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை காலை அவர் வரும் விண்கலம் பூமியில் தரை இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ்க்கு பிரதமர் மோடி எழுதிய கடிதம்:

நான் இந்திய மக்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களது சாதனைகளால் 140 கோடி இந்தியர்கள் பெருமை அடைகின்றனர். நீங்கள் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும், எங்கள் இதயத்துக்கு மிக நெருக்கமாகவே இருக்கிறீர்கள்.

உங்கள் உடல் நலத்துக்காகவும், உங்கள் பயணம் வெற்றிகரமாக நிறைவேறவும் இந்திய மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்கின்றனர்.

நான் அமெரிக்க அதிபர் டிரம்ப், பைடன் ஆகியோருடன் பேசும் போதெல்லாம் உங்களது நலம் பற்றி தொடர்ந்து விசாரித்து வந்தேன்.

நீங்கள் பூமிக்கு திரும்பியதும், இந்தியாவுக்கு வருவீர்கள் என்று நாங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். மிகவும் பெருமைக்குரிய மகள் ஒருவரை தங்கள் நாட்டுக்கு வரவேற்பதில் இந்தியா மிகவும் மகிழ்ச்சி அடைகிறது. நீங்களும், வில்மோரும் பத்திரமாக பூமியை வந்தடைய எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

போதை பொருள் விற்பனையில் தமிழகம ...

போதை பொருள் விற்பனையில்  தமிழகம் முதலிடம் – எ ச் ராஜா தமிழகத்தில் அதிக அளவில் போதைப்பொருள் விற்பனையாகிறது. கஞ்சா மூடைகள் ...

2026 தேர்தலில் திமுக அவுட் ஆப் கன் ...

2026 தேர்தலில் திமுக அவுட் ஆப் கன்ட்ரோல் – நயினார் நாகேந்திரன் ''2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., தமிழகத்தில் இருந்து அவுட் ...

குற்றங்களை மூடி மறைக்கும் திமு ...

குற்றங்களை மூடி மறைக்கும் திமுக அரசு – அண்ணாமலை குற்றச்சாட்டு பொதுமக்களின் அடிப்படைத் தேவையான சுத்தமான குடிநீரைக் கூட வழங்க ...

திமுக ஆட்சிக்கு பூட்டு போட வேண் ...

திமுக ஆட்சிக்கு பூட்டு போட வேண்டும்  – பாஜக மாநில தலைவர் ''அ.தி.மு.க., -பா.ஜ., கூட்டணி உறுதியான கூட்டணி; இறுதியான கூட்டணி'' ...

”தமிழக அரசு எனது போனை ஒட்டு கே ...

”தமிழக அரசு எனது போனை ஒட்டு கேட்கிறது”- மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ''தமிழக அரசு எனது போனை ஒட்டு கேட்கிறது'' என்று ...

விண்வெளியில் செயற்கைகோள்களின் ...

விண்வெளியில் செயற்கைகோள்களின் இரண்டாவது இணைப்பு வெற்றி; மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் விண்வெளியில் செயற்கைக்கோள்களின் இரண்டாவது இணைப்பு வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது என ...

மருத்துவ செய்திகள்

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...