நீங்கள் ஒரு நாள் முதல்வர் ஆவீர்கள் என்று அஜித் பவாரிடம் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
மஹாராஷ்டிரா சட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்தது. இதில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர் அஜித்பவார் குறித்து ஆச்சர்யமான ஒரு கருத்தை தெரிவித்தார். அதாவது, நீங்கள் நிரந்தர துணை முதல்வர் என்று அழைக்கப்படுகிறீர்கள். ஆனால், என்னுடைய ஆசை என்னவென்றால், என்றைக்காவது ஒரு நாள் நீங்கள் முதல்வராக இருப்பீர்கள் என்றார்.
அவர் மேலும் பேசுகையில், மஹாராஷ்டிராவின் தலைமை மூவரின் பணி அட்டவணையைப் பற்றி எளிதாக கூறுகிறேன். அஜித் பவார் அதிகாலையில் பொறுப்புகளை ஏற்பார். ஏக்நாத் ஷிண்டே இரவு முழுவதும் பணியாற்றுவார்.
அஜித் பவார் அதிகாலையில் எழுந்து விடுவதால், காலையில் வேலை செய்வார். நான் மதியம் 12 மணி முதல் நள்ளிரவு வரை பணியில் இருக்கிறேன். இரவு முழுவதும் உங்கள் அனைவருக்கும் தெரியும், யார் என்று உங்களுக்குத் தெரியும் அவர் தான் ஏக்நாத் ஷிண்டே என்றார்.
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |