1971ம் ஆண்டு வெற்றியை, காங்கிரஸ் சரியாக பயன்படுத்தி கொள்ள தவறிவிட்டது

1971ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற்ற போரில் கிடைத்த வெற்றியை, காங்கிரஸ் சரியாக பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டது என்று பாஜக மூத்த தலைவர் எல்கே அத்வானி குற்றஞ்சாட்டியுள்ளார்

தனது வலைதளத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது ;
1971ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான போரில் இந்தியாவுக்கு

கிடைத்த வெற்றியின்-பலனை காங்கிரஸ்கட்சி சரியாக பயன்படுத்த தவறிவிட்டது. இதன்காரணமாக எல்லைத்தாண்டிய பயங்கரவாதம் மற்றும் மதத்தின் பெயரிலான-பயங்கரவாதத்தை பாகிஸ்தான் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்துவருகிறது.

இந்தியாவில் 561 சமஸ்தானங்களை-ஒன்றிணைத்து சிதறுண்டு கிடந்த இந்தியாவை வலிமைமிக்கதாக சர்தார் வல்லப பாய்பட்டேல் மாற்றினார். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது, காஷ்மீர்-பிரச்ûனையில் ஜவாஹர்லால் நேருவின் தீர்வு முயற்சி தோல்வியை தழுவியது. இதற்கான-தீயபலனை இந்தியா இன்று அனுபவித்து-வருகிறது.

காஷ்மீருக்கு சிறப்புஅதிகாரம் வழங்கும் 370பிரிவு, தற்காலிகமானது தான் என நேரு கூறியபோதும், இன்னும் அது ரத்து செய்ய படவில்லை. எனவே இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான்-சக்திகளின் உதவியுடன் பிரிவினைவாதிகள் காஷ்மீரில் தலை எடுத்துள்ளனர். காஷ்மீர், இந்தியாவின் ஒருபகுதியல்ல என்று அவர்கள் விஷமபிரசாரம் செய்து வருகின்றனர்.

நேரு தலைமையிலான மத்திய-அரசோ, ஷேக் அப்துல்லா-தலைமையிலான காஷ்மீர் அரசோ, காஷ்மீர் முழுமையாக இந்திய-யூனியனுடன் இணைக்கபடவேண்டும் என எப்போதும் நம்பியதில்லை என்று தெரிவித்துள்ளார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...